ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
நடிகை ஹன்சிகா நடிப்பு தவிர அவர் ஒரு ஓவியரும் கூட. அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தான் நடத்தி வரும் குழந்தைகள் நலபாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்க தீர்மானித்திருக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா வரைந்த ஓவியம் ஒன்றை ஒருவர் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அந்த பணத்தை குழந்தைகளின் அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகாவின் தாயார் டாக்டர் மோனா கூறியிருப்பதாவது: ஹன்சிகாவை தேடி அவரது ரசிகரும், எங்கள் குடும்ப நண்பருமான ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஹன்சிகாவின் ஓவியத்தையும், அதன் நோக்கத்தையும் புரிந்துகொண்டு ஹன்சிகா வரைந்த ஓவியத்தை 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி கொண்டார்.
தற்போது தன் பள்ளி தோழிகளுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஹன்சிகா வருகிற 5ந் தேதி இந்தியா வருகிறார். வருகிற ஆகஸ்ட் 9ந் தேதி அவருக்கு பிறந்த நாள். வழக்கமாக ஒரு குழந்தையைத்தான் அவர் தத்தெடுப்பார். இந்த பிறந்த நாளுக்கு 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறார் என்றார்.