‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகை ஹன்சிகா நடிப்பு தவிர அவர் ஒரு ஓவியரும் கூட. அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஒரு கண்காட்சி நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை தான் நடத்தி வரும் குழந்தைகள் நலபாதுகாப்பு அறக்கட்டளைக்கு வழங்க தீர்மானித்திருக்கிறார். இதற்கிடையில் ஹன்சிகா வரைந்த ஓவியம் ஒன்றை ஒருவர் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி அந்த பணத்தை குழந்தைகளின் அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகாவின் தாயார் டாக்டர் மோனா கூறியிருப்பதாவது: ஹன்சிகாவை தேடி அவரது ரசிகரும், எங்கள் குடும்ப நண்பருமான ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஹன்சிகாவின் ஓவியத்தையும், அதன் நோக்கத்தையும் புரிந்துகொண்டு ஹன்சிகா வரைந்த ஓவியத்தை 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கி கொண்டார்.
தற்போது தன் பள்ளி தோழிகளுடன் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஹன்சிகா வருகிற 5ந் தேதி இந்தியா வருகிறார். வருகிற ஆகஸ்ட் 9ந் தேதி அவருக்கு பிறந்த நாள். வழக்கமாக ஒரு குழந்தையைத்தான் அவர் தத்தெடுப்பார். இந்த பிறந்த நாளுக்கு 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறார் என்றார்.