ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் இப்போது தெலுங்கு தொலைக்காட்சியில் மேலோ எவரு கோடீஸ்வரலுடு (உங்களில் யார் கோடீஸ்வரர்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிகழ்ச்சி இது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாலையில் போக்குவரத்து குறைந்து விடுவதாக சொல்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மீது மோகம் கொண்டு திரிகிறார்கள் ஆந்திர மக்கள்.
"இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் மனதிலும் நான் இடம் பிடித்திருக்கிறேன். இந்த அளவுக்கு நிகழ்ச்சியை உயர்த்தி பிடித்த மக்களுக்கு என் நன்றி" என்கிறார் நாகர்ஜுனா. நிகழ்ச்சியின் விளம்பரக் கட்டணம். கோடியை தாண்டியிருக்கிறதாம்.