ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான சுவாதிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தார். தற்போது யட்சன் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகைகளில் கிசுகிசுவில் சிக்காதவர் சுவாதி. ஏன் என்று அவரே கூறுகிறார் "நான் ரொம்ப சிம்பிளான பொண்ணு, எல்லா பொண்ணுங்களும் வேலைக்கு போற மாதிரி நான் சினிமாவுல நடிக்கப்போறேன். ஷூட்டிங் முடிஞ்சா சாதாரணமா நடந்து வீட்டுக்கு போகணும்னு விரும்புறேன். பெரிய நடிகைன்னு தலையில எதையும் ஏத்தி வச்சிக்கிறதில்ல. நான் உண்டு என் வேலை உண்டு அவ்வளவுதான். தேடி வர்ற படங்கள்ல மட்டும் நடிக்கிறேன். எந்த வாய்ப்பையும் தேடிப்போறதில்ல.
எனக்கு தேவை நல்ல படம், நல்ல வேடம். பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. அப்படி ஆசையிருந்தால் அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். அதற்கு நான் தயாராக இல்லை. 5 வருடமோ பத்து வருடமோ சினிமாவுல நடிக்கப்போறேன். அதுவரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போலாமே ஏன் டென்ஷனோட வாழணும். மீடியாக்கள் காதல், கல்யாணம் பற்றி கேக்குறப்போதான் பயம் வருது. அண்ணா விட்டுருங்கண்ணான்னு கும்பிடுவேன். ஏன்னா திருமணம்னா எனக்கு அப்படியொரு பயம் என்கிறார் ஸ்வாதி.