ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சமீபத்தில் வெளியானது. இதை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் ஒரு காட்சியில் தனுஷ் தன் தந்தையிடம் கோபமாக பேசும்போது "அவனை (தம்பி) மட்டும் காண்வெண்டுல படிக்க வச்சீங்க என்னைய ராமகிருஷ்ணா மிஷன்லதான படிக்க வச்சீங்க" என்பார். இது கான்வெண்ட் பள்ளி உயர்ந்தது போன்றும், ராமாகிருஷ்ணா மிஷன் பள்ளி தாழ்ந்ததும் போன்றும் அர்த்தம் தொணிப்பதாக அமைந்திருந்தது.
இது நாடு முழுவதும் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. "ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தவர்கள் பலர் டாக்டர்களாகவும், என்ஜீனியர்களாகவும், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர். ஆன்மீக வழியில் நடத்துப்படும் பள்ளியை இப்படி அவமானப்படுத்தலாமா?" என்று அவர்கள் கேட்டு வருகிறார்கள்.
இதற்கு படத்தின் இயக்குனர் வேல்ராஜ் அளித்துள்ள விளக்கம் வருமாறு: யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அந்த வசனம் வைக்கப்படவில்லை. அந்த பள்ளியில் படித்த தனுஷ் படித்த படிப்புக்கேற்ற வேலை தேடுகிறார். தமிழ் மீடியத்தில் படித்தோம் என்கிற தாழ்வு மனப்பாண்மையை உடைச்சு, அவர் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான் கதையே. அவரை நேர்மையானவராகவும், உழைப்பாளியாகவும் காட்டியிருக்கிறோம். அந்த பள்ளி மாணவனை கவுரவப்படுத்தியிருக்கிறோம். அதையும் மீறி அந்த வசனம் யார் மனதையாவது புண்படுத்தியிருக்குமானால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்கிறார் வேல்ராஜ்.