ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், மலையாளம் என எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் அந்த மொழியில் முன்னணியில் இருக்கும் இரண்டு நடிகர்களுக்கிடையே எப்போதுமே தொழில் போட்டி நடப்பதை தவிர்க்க முடியாது. அந்த வகையில், தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை எம்.ஜி.ஆர். சிவாஜி காலத்தில் அவர்களுக்கிடையே தொழில் முறைப்போட்டி நடந்தது.
அதன்பிறகு ரஜினி-கமலுக்கிடையேயும் தொழில் போட்டி நடந்தது. அதையடுத்து, விஜய்-அஜீத்துக்கிடையேயும் நடந்து கொண்டிருக்கிறது.இருப்பினும், திரைக்குப்பின்னால் இவர்கள் அனைவருமே நல்ல நண்பர்கள் ஒருவர் நடிப்பை ஒருவர் பாராட்டி விமர்சிக்கும் ஆரோக்யமான நட்பு அவர்களுக்கிடையே நிலவியது. நிலவியும் வருகிறது.
இதேபோல்தான் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்களான மோகன்லால்-மம்மூட்டி ஆகிய இருவருக்கிடையேயும் நல்ல நட்பு நிலவி வருகிறது. ஆனால் அவர்களது ரசிகர்கள்தான் அவ்வப்போது மோதிக்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜானையொட்டி மோகன்லாலை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தாராம் மம்மூட்டி. அதை ஏற்று அவரது வீட்டுக்கு சென்று பண்டிகை கொண்டாடியிருக்கிறார் மோகன்லால். இரண்டு மெகா நடிகர்கள் இணைந்து ரம்ஜானை கொண்டாடியதை கேரளா மீடியாக்கள் பக்கம் பக்கமாய் பாராட்டி வருகின்றன.