ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சல்மான் கானையும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது போல. சில வாரங்களுக்கு முன்னர்தான் சல்மானின் பாதுகாவலர்கள் புகைப்படக் கலைஞர்களிடம் அத்து மீறி நடந்து கொண்டதால் பிரச்சனை எழுந்தது. அதன் பின் 'கிக்' படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிகளையும் மும்பை புகைப்படக் கலைஞர்கள் எடுப்பதில்லை. இதனிடையே சமீபத்தில் 'கிக்' படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் சல்மான் கான் கொண்டாடிக் கொண்டிருந்த போது, அவருடைய பாதுகாவலரை அவரே அடித்த சம்பவம் நடந்துள்ளது.
மும்பையிலுள்ள மெகபூப் ஸ்டுடியோவில் தனது ரசிகர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார் சல்மான் கான். அப்போது அவருடன் பல ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர். அவரும் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளதால் மகிழ்ச்சியுடன் ரசிகர்களை பக்கத்தில் நிற்க வைத்து புகைப்படம் எடுக்க சம்மதித்தார். அப்போது ஒரு ரசிகர் ஆர்வ மிகுதியால் சல்மான் கானின் தோளை தொட்டுக் கொண்டு புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது சல்மானின் பாதுகாவலர் ஒருவர், அந்த ரசிகரை அவரிடமிருந்து இழுத்திருக்கிறார். அப்போது ரசிகரை லேசாக இடிக்கவும் செய்திருக்கிறார்.
இதைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த சல்மான் கான் டென்ஷனாகி ரசிகர்களின் முன்னிலையிலேயே அவருடைய பாதுகாவரை அடித்திருக்கிறார். பாதுகாப்புக் குழுவினரைப் பார்த்து சத்தம் போட்டிருக்கிறார். ரசிகர்களிடம் இப்படி நடந்து கொள்வது தவறு, அவர்களால்தான் தான் இந்த அளவிற்கு வெற்றி பெற்று வருகிறேன் என்றும் கூறியிருக்கிறார். ரசிகர்கள் மீது சல்மான் கான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். ரசிகர்களின் வேலை வாய்ப்புக்காக ஒரு இணைய தளத்தையும் தொடங்க முடிவெடுத்திருக்கிறார்.
ம்ம்..இதே நம்ம ஊரா இருந்தால் படத்துக்குப் படம் புது ரசிகர் மன்றம் தானே தொடங்குவாங்க...!