ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மன்னன் மகள் தொடரில் விஷாலி, தாயம்மா என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் மதுமிதா. இந்த தொடருக்காக தீவிரமாக வாள் சண்டை கற்று வருகிறார். பிரியாணி படத்தில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த பிசியான ஷெட்யூலிலும் ஈமுகோழி பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: ஷியானா என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். நானும் என் கணவர் சிவபாலாஜியும் இணைந்து இதனை தொடங்கி இருக்கிறோம். இது ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் அல்ல. ஈமு கோழியில் இருந்து சில பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இப்போது ஐதராபாத்தில் ஆரம்பித்திருக்கிறோம் சக்சஸ் ஆனால் சென்னையில் தொடங்குவோம்.
விரைவில் என் கணவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு படம் ஒன்றை இருவரும் சேர்ந்து தயாரிக்க இருக்கிறோம். எங்கள் வீடு ஐதராபாத்திலும், மாமியார் வீடு சென்னையிலும் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கியிருந்து நடிக்கிறேன். மன்னன் மகள் சீரியலில் இரண்டு வேடத்தில் நடிப்பதால் அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால் வேறு சீரியல்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. என்கிறார் மதுமிதா.