கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
மன்னன் மகள் தொடரில் விஷாலி, தாயம்மா என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் மதுமிதா. இந்த தொடருக்காக தீவிரமாக வாள் சண்டை கற்று வருகிறார். பிரியாணி படத்தில் நடித்தார். தற்போது மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த பிசியான ஷெட்யூலிலும் ஈமுகோழி பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: ஷியானா என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். நானும் என் கணவர் சிவபாலாஜியும் இணைந்து இதனை தொடங்கி இருக்கிறோம். இது ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம் அல்ல. ஈமு கோழியில் இருந்து சில பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இப்போது ஐதராபாத்தில் ஆரம்பித்திருக்கிறோம் சக்சஸ் ஆனால் சென்னையில் தொடங்குவோம்.
விரைவில் என் கணவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு படம் ஒன்றை இருவரும் சேர்ந்து தயாரிக்க இருக்கிறோம். எங்கள் வீடு ஐதராபாத்திலும், மாமியார் வீடு சென்னையிலும் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தங்கியிருந்து நடிக்கிறேன். மன்னன் மகள் சீரியலில் இரண்டு வேடத்தில் நடிப்பதால் அதற்கே நேரம் சரியா இருக்கிறது. அதனால் வேறு சீரியல்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. என்கிறார் மதுமிதா.