ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரைப்பட உலகில் மட்டும் இசை விழாவோ, அல்லது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள அந்தந்த படங்களில் நடிக்கும் நடிகைகள் முன் வருவதே இல்லை. நயன்தாரா, த்ரிஷா போன்ற பல நடிகைகள் படத்தில் ஒப்பந்தமாகும் போதே அவற்றிற்கெல்லாம் தங்களை அழைக்கக் கூடாது என்று சொல்லி விடுகிறார்களாம். நடிகைகள் அவரவர் நடிக்கும் படங்களின் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும், அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சொன்னாலும் அப்படி எதுவும் நடந்ததுமில்லை. தமிழில் இனிதான், வெற்றிப் படக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சமந்தா, கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ளும் சமந்தா, தமிழில் முதன்முதலாக ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்கும் படத்தின் விழாவுக்கு வராமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் படத்தின் ஹீரோவான சூர்யாவும் கடுப்பாகி விட்டாராம். அடுத்து சமந்தா, விஜய்யுடன் நடிக்கும் கத்தி படத்தின் விழாக்களில் கலந்து கொண்டால் இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.
படத்தில் நடிக்கும் நடிகைகளுக்காகவும் சில படங்கள் ஓடுகின்றன. அவர்கள் வந்தால்தான் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுகிறார்கள். நடிகைகள் கலந்து கொள்ளும் விழாக்களை மட்டுமே மீடியாக்கள் அதிகம் வெளியிடுகின்றன. அப்படியிருக்க இம்மாதிரியான விழாக்களில் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சில இயக்குனர்கள் கடுமையாக எதிர்க்கிறார்களாம். அப்படிப்பட்ட நாயகிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்களாம்.
பத்திரிகையாளர்கள் அலைக்கழிப்பு
முன்னதாக அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்காத சமந்தா, அன்று மாலை பத்திரிகையாளர்களை தனியார் ஓட்டல் ஒன்றில் சந்திப்பதாக கூறி பத்திரிகையாளர்களை வர சொன்னார். சமந்தாவின் அழைப்பை ஏற்று பத்திரிகையாளர்களும் வந்தனர், ஆனால் கடைசிவரை அவர் வரவே இல்லை, தேவையில்லாமல் பத்திரிகையாளர்களை அலைகழிப்பு செய்தார்.