Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சான் இசை விழாவுக்கு வர சமந்தா பணம் கேட்டாரா ?

27 ஜூலை, 2014 - 14:27 IST
எழுத்தின் அளவு:

தமிழ்த் திரைப்பட உலகில் மட்டும் இசை விழாவோ, அல்லது படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ள அந்தந்த படங்களில் நடிக்கும் நடிகைகள் முன் வருவதே இல்லை. நயன்தாரா, த்ரிஷா போன்ற பல நடிகைகள் படத்தில் ஒப்பந்தமாகும் போதே அவற்றிற்கெல்லாம் தங்களை அழைக்கக் கூடாது என்று சொல்லி விடுகிறார்களாம். நடிகைகள் அவரவர் நடிக்கும் படங்களின் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும், அப்படி கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி சொன்னாலும் அப்படி எதுவும் நடந்ததுமில்லை. தமிழில் இனிதான், வெற்றிப் படக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் சமந்தா, கடந்த வாரம் அஞ்சான் படத்தின் இசை வெளியீடு, பாடல்கள் திரையீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமந்தா, மேற்கொண்டு பணம் வேண்டும் என்று கேட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும் தவறாமல் கலந்து கொள்ளும் சமந்தா, தமிழில் முதன்முதலாக ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்கும் படத்தின் விழாவுக்கு வராமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் படத்தின் ஹீரோவான சூர்யாவும் கடுப்பாகி விட்டாராம். அடுத்து சமந்தா, விஜய்யுடன் நடிக்கும் கத்தி படத்தின் விழாக்களில் கலந்து கொண்டால் இந்தப் பிரச்சனை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.

படத்தில் நடிக்கும் நடிகைகளுக்காகவும் சில படங்கள் ஓடுகின்றன. அவர்கள் வந்தால்தான் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுகிறார்கள். நடிகைகள் கலந்து கொள்ளும் விழாக்களை மட்டுமே மீடியாக்கள் அதிகம் வெளியிடுகின்றன. அப்படியிருக்க இம்மாதிரியான விழாக்களில் அவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சில இயக்குனர்கள் கடுமையாக எதிர்க்கிறார்களாம். அப்படிப்பட்ட நாயகிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார்களாம்.

பத்திரிகையாளர்கள் அலைக்கழிப்பு

முன்னதாக அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்காத சமந்தா, அன்று மாலை பத்திரிகையாளர்களை தனியார் ஓட்டல் ஒன்றில் சந்திப்பதாக கூறி பத்திரிகையாளர்களை வர சொன்னார். சமந்தாவின் அழைப்பை ஏற்று பத்திரிகையாளர்களும் வந்தனர், ஆனால் கடைசிவரை அவர் வரவே இல்லை, தேவையில்லாமல் பத்திரிகையாளர்களை அலைகழிப்பு செய்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in