ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் பூரி ஜெகன்னாத். தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவர். அவர் தற்போது புதிய அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். அந்த அலுவலகத்தைப் பற்றிய பேச்சுத்தான் தெலுங்குத் திரையுலகில் அதிகமாக உள்ளது. சுமார் 18000 சதுரை அடியில் 20 கோடி ரூபாய் செலவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போன்று அவருடைய அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளதாம். அதில் மினி தியேட்டர், பார், டிஸ்கஷன் ரூம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாம்.
அந்த அலுவலகத்தைப் பற்றி பூரி ஜெகன்னாத் கூறியதாவது, “இந்த அலுவலகத்தை கடந்த ஞாயிறு அன்று திறந்தேன், அதற்காக எனது நண்பர்களுக்கு சிறிய ட்ரீட் வைத்தேன். இது என்னுடைய தனிப்பட்ட இடம். இதை என்னுடைய அலுவலகம், வீடு, ரிசார்ட் என அழைக்கலாம். நான் இதை என்னுடைய குகை என்று கூட அழைப்பேன். ஏனென்றால் இந்த உலகம் காடு போன்றது, அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு குகை தேவைப்படுகிறது,” என்றார்.
தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'போக்கிரி' படத்தின் கதை இவருடையதுதான். தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் இயக்கியுள்ளார். படத்தில் காட்டும் பிரம்மாண்டத்தைப் போலவே அவருடைய அலுவலகத்திலும் பிரம்மாண்டத்தை காட்டி விட்டடார்.