ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதே ஒரு பெரும் சர்ச்சையாக உள்ளது. ஒரு சாரர் நல்ல சக்தி இருப்பது போன்று தீய சக்திகளும் உள்ளது என்று சொல்கிறார்கள். இன்னொரு சாரரோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அப்படியிருந்தால் இலங்கையில் எத்தனையோ விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். அவர்கள் ஏன் பேயாக வந்து தங்களை கொன்றவர்களை பழிவாங்கவில்லை? என்று கேள்வி கேட்கிறார்கள்.
இப்படி அமானுஷ்யம் என்ற விசயத்துக்கு இரண்டுவிதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்த நிலையில், குணசித்ர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவத்தைப்பற்றி கூறும்போது, பேய் என்றாலே நமக்கு பயம் வருகிறது. அந்த அளவுக்கு சின்ன வயதில் இருந்தே அதைப்பற்றி சொல்லி நம்மை பயமுறுத்தியே வளர்த்திருக்கிறார்கள்.
ஆனால் சிலர், தாங்கள் பேயை பார்த்ததாக சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படியொரு அனுபவம் எனக்கும் ஒருமுறை ஏற்பட்டிருக்கிறது. அதாவது, காதல் தீயே என்ற படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த நேரம் அது. படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் என்று சொன்னார்கள். அதனால் ஒரு காரில் ஜோதிடர் ஒருவருடன் பாண்டிச்சேரிக்கு சென்று கொண்டிருந்தேன்.
அந்த இரவு நேரத்தில் மரக்காணம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு வெளிச்சம் காரை கிராஸ் பண்ணி சென்றது. அது பேயோ இல்லை, ஏதாவது வெளிச்சமோ, இல்லை வாகனங்களின் புகை மண்டலமோ எனக்கு தெரியவில்லை. ஆனால், மற்றவர்கள் சொல்லதைக்கேட்டு அது பேயாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். இதுதான் எனக்கு ஏற்பட்ட அனுபவம். என்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.