ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக அஜீத் நடிக்கும் படங்களுக்கு கதை ரெடி பண்ணுவதை விட டைட்டீல் ரெடி பண்ணுவதில்தான் அப்படங்களின் டைரக்டர்கள் தலையை பிய்த்துக்கொள்கிறார்கள். அந்த வகையில், ஆரம்பம் படத்தின் டைட்டீலை மொத்த படப்பிடிப்பும முடிந்து படம் திரைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அறிவித்தார்கள்.
அதுபற்றி அப்போது அப்பட டைரக்டர் விஷ்ணுவர்தன் கூறும்போது, இந்த படத்தின் கதையை சொன்னபோதே அஜீத்திடம் இரண்டு டைட்டில்களை சொன்னேன் ஆனால் அவை அவருக்கு பிடிக்கவில்லை, அதனால் வேறு நல்லதாக யோசியுங்கள் என்று சொன்னார். அதனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே அவ்வப்போது கதை விவாதம் போன்று டைட்டீல் விவாதத்தையும் உதவி இயக்குனர்களுடன் அமர்ந்து யோசித்து வந்தேன்.
அந்த வகையில, நூற்றுக்கணக்கான டைட்டில்களை அவ்வப்போது எழுதி அஜீத்திடம் கொடுப்பேன். அப்படி ஒரு முறை கொடுத்த ஆரம்பம் டைட்டீல்தான் அவருக்கு பிடித்திருந்தது. அந்த டைட்டீலை நான் சும்மா பத்தோடு பதினொன்றாகத்தான் எழுதியிருந்தேன். ஆனால் அவருக்கு அதுதான் பிடித்திருந்தது. அதனால்தான் ஆரம்பம் என்றே டைட்டீல் வைத்தோம் என்றார்.
அதேபோல் இப்போது அஜீத்தின் 55வது படத்தை இயக்கி வரும் கெளதம்மேனனும், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உதவியாளர்களுடன் டைட்டீல் பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி தான் யோசித்ததை பல பேப்பர்களில் எழுதி வைத்திருக்கிறாராம். தற்போது படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டி விட்டதால், டைட்டீலை முடிவு செய்து வடுவோம் என்று அஜீத்திடம் கூறியிருக்கிறாராம்.
அதையடுத்து, ஆகஸ்ட் மாதம் படத்தின் டைட்டீலை அறிவிக்கலாம் என்று கூறியிருக்கிறாராம் அஜீத்.