பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழ் சினிமாவில், கமல், ரஜினி, சரத்குமார் உள்பட பல நடிகர்கள் கதைக்காக மொட்டையடித்து நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் அப்படி நடித்த படங்கள் பெரும்பாலும் ஆக்சன் கதைகளாகவே இருந்திருக்கும். ஆனால், தற்போது மலையாள நடிகர் சுரேஷ்கோபி ஒரு காமெடி படத்துக்காக முதன்முதலாக மொட்டையடித்து நடித்துள்ளார்.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களான மோகன்லால், மம்மூட்டிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருப்பவர் சுரேஷ்கோபி. பெரும்பாலும் கரடுமுரடான கதைகள், கதாபாத்திரங்களில்தான் இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில், மலையாள சினிமாவில் முக்கிய ஆக்சன் ஹீரோவாக திகழ்பவர் சுரேஷ் கோபி.
ஆனால், அப்படி தான் நடித்த எந்த படத்துக்கும் இதுவரை மொட்டையடித்து நடிக்காத அவர், டிவின் என்பவர் இயக்கும் மாலூட்டி பாபு என்ற காமெடி கதைக்காக இப்போது மொட்டையடித்துள்ளாராம். இதற்கு முக்கிய காரணம், கதை என்றாலும், ஆக்சன் ஹீரோவான சுரேஷ்கோபிக்கு வித்தியாசமான காமெடி ஸ்கிரிப்ட்டில் நடிக்க வேண்டும் என்பது நீண்டகால கனவாம்.
அதனால் தான் எதிர்பார்த்தது போன்ற கதை கிடத்ததோடு, அந்த கதைக்கு கண்டிப்பாக மொட்டையடிக்க வேண்டும் என்று டைரக்டர் கேட்டுக்கொண்டதால், துளியும யோசிக்காமல் மொட்டையடித்து நடித்துள்ளாராம் அவர். இதையடுத்து இனி தொடர்ந்து காமெடி கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகவும் கூறி வரும் சுரேஷ்கோபி, கேரளாவில் உள்ள காமெடி ரைட்டர்களை அணுகி தனக்கான கதைகளை ரெடி பண்ணுமாறு கேட்டுக்கொண்டு வருகிறாராம்.