கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
முன்பெல்லாம் ரஜினி-கமல் நடித்த படங்கள் திரைக்கு வருகிறது என்றாலே வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்கள் அலறியடித்துக்கொண்டு ஓடிவிடும். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. குறிப்பாக, ரஜினி நடித்த கோச்சடையான் திரைக்கு வந்தபோது பல படங்கள் வரிந்து கட்டி நின்றன. இதனால் கோச்சடையான்தான் சிலதடவை பின்வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதையடுத்து, இப்போது கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2-ந்தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், இந்த சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட மாட்டார்கள் என்றுதான் கருதினர். ஆனால், அதே நாளில் இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாணா படத்தை வெளியிட முடிவே செய்து விட்டார்களாம்.
கமல் சார் படம் வருது, இந்த நேரத்துல சின்ன படத்தை வெளியிட வேண்டுமா? என்று சிலர் அப்பட தயாரிப்பாளரான தனுஷிடம் கேட்டதற்கு, எது சின்ன படம், எது பெரிய படம் என்பதை முடிவு செய்வது நாமல்ல ரசிகர்கள்தான். அதோடு, இப்பல்லாம் நடிகர்களுக்காக எந்த படமும் ஓடுறது இல்லை. கதைக்காகத்தான் படம் ஓடுது. அந்த வகையில் டாணா படத்தை நான் கதையை நம்பித்தான் எடுத்திருக்கேன். அதனால் எனக்கு எந்த படத்தைக்கண்டும் பயமில்லை என்றாராம் தனுஷ்.