ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2000 வருடத்தில இளையவன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் சத்யன். அதன்பிறகு கண்ணா உன்னை தேடுகிறேன் என்ற படத்திலும் நடித்தார். ஆனால் அப்படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால், அதன்பிறகு காமெடியன், குணசித்ர நடிகர் என நடித்து வரும் சத்யன், எனது சினிமா கேரியரை நண்பனுக்கு முன்பு, நண்பனுக்கு பிறகு என்று பிரித்துக்கொள்ளலாம் என்கிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
* காமெடியன் சத்யன், குணசித்ர நடிகர் சத்யன் இருவரின் யாரை உங்களுக்கு அதிகமாக பிடிக்கும்?
காமெடியனாக ஏராளமான படங்களில் நடித்து விட்டேன். பல படங்களில் எனது நடிப்பைப்பார்த்து நானே கைதட்டி ரசித்திருக்கிறேன். என்றாலும், குணசித்ர வேடங்கள்தான் எனக்கு திருப்தி கொடுத்தன. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த நண்பன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி போன்ற உள்பட சில படங்கள் ஒரு நடிகனாய் என்னை திருப்திபடுத்தின்.
இதில் நண்பனில் காமெடியனாக வந்தாலும், குணசித்ர தன்மை கொண்ட காட்சிகளிலும் நடித்தேன். அந்த படத்தில் நான் நடித்தபோது உங்களுக்கு ஜோடிதான் இல்லையே தவிர, இந்த படத்தைப் பொறுத்தவரை நீங்களும் ஒரு ஹீரோதான் என்பார் டைரக்டர் ஷங்கர் சார். அந்த வகையில், அதுவரை பல படங்களில் சிறிய அளவிலான வேடங்களில் நடித்த எனக்கு நண்பன் படத்தில் படம் முழுக்க வரும் நல்ல கேரக்டரை ஷங்கர் சார் கொடுத்திருந்தார். அதன்பிறகுதான் எனக்கு வெயிட்டான வேடங்களை மற்ற டைரக்டர்கள் தந்தார்கள். அந்த வகையில், எனது சினிமா கேரியரை நண்பனுக்கு முன்பு, நண்பனுக்கு பிறகு என்று பிரித்துக்கொள்ளலாம்.
* சமீபகாலமாக நீங்கள் படம் முழுக்க வரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் மட்டுமே செலக்டீவாக நடிப்பதாக கூறப்படுகிறதே?
ஆரம்பத்தில் சின்னச்சின்ன வேடங்களில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். குறிப்பாக சூர்யா நடித்த மாயாவி, கஜினி, ஆதவன் உள்பட பல படங்களை சொல்லலாம். அப்போது நான் பேசப்படும் நடிகன் இல்லை என்பதால், அந்த வேடங்களை ஏற்றுக்கொண்டேன். அதோடு, கஜினி படத்தில் ரொம்ப சிறிய ரோல். இருப்பினும், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கேட்டுக்கொண்டதால் அவருக்காக நடித்தேன்.
ஆனால் அந்த படத்தில் சிறிய வேடம் தந்த அவர், பின்னர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் எனக்கு படம் முழுக்க வரும் நல்லதொரு போலீஸ் கேரக்டரை தந்தார். விஜய்யின் நண்பனாக நடித்த அந்த வேடம் முதலில் காமெடியாக தெரிந்தாலும் பின்னர் குணசித்ர நடிகராக என்னை வெளிப்படுத்தியது. க்ளைமாக்ஸில், போலீஸை விட மிலிட்டரி கிரேட்தான் என்று விஜய்யைப்பார்த்து சொல்லும் காட்சியில் ரசிகர்கள் சிரித்து விடுவார்களோ என்று பயந்தேன். ஆனால், அந்த காட்சியை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன்பிறகுதான், குணசித்ர வேடங்களில் நாம் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
மேலும், இப்போது சத்யனும் நடிக்கக்கூடிய நடிகர் என்றொரு பெயர் ஏற்பட்டுள்ளது. அதனால், எனது திறமையை வெளிப்படுத்தும் கதைகள், கேரக்டர்களாக செலக்டீவாக நடிக்கிறேன். மேலும், நான் நடித்த 5 படங்கள் வரை இன்னும் திரைக்கு வராமல் கிடப்பில் கிடக்கிறது. அதனால் இபபோது நல்ல கம்பெனி படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.
சூர்யா உள்ளிட்ட உங்களுக்கு நெருக்கமானவர்கள் பலர் சினிமாவில் இருக்கிறார்களே. அவர்கள் உங்களுக்கு சிபாரிசு செய்கிறார்களா?
அப்படியெல்லாம் யாரும் எனக்கு சிபாரிசு செய்யவில்லை. சூர்யா நடித்த கஜினி, ஆதவன், மாயாவி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறேன். அதெல்லாமே அந்த படங்களின் இயக்குனர்கள் என்னை அழைத்து சான்ஸ் கொடுத்ததுதான். நண்பர்கள், உறவினர்கள் என்ற பெயரில் இதுவரை யாரும் எனக்கு சிபாரிசு செய்ததில்லை. மேலும். சினிமாவைப்பொறுத்தவரை திறமை ஒன்றுதான் மூலதனம். அதை வைத்துதான் எனக்கு படங்கள் கிடைத்து வருகிறது.
* பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா தயாரிக்கும் படத்தில் நீங்கள்தான் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளதே?
பாண்டிராஜ் இயக்கும் அந்த படத்தில் நடிக்க 2 மாதங்களுக்கு முன்பே என்னிடம் பேசினார். அப்போது ஓ.கே சொல்லிருந்தேன். ஆனால், 15 நாட்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டபோது, அவர்கள் சொன்ன சம்பளம் ரொம்ப குறைவாக இருந்தது. அந்த அளவுக்கு கம்மியாக இதுவரை யாரும் என்னை நடிக்கக்கேட்டதே இல்லை. அதனால், நடிக்க மறுத்து விட்டேன். மற்றபடி அந்த படத்தை சூர்யா தயாரித்து ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்பது போன்ற விசயங்களையெல்லாம் நானும் பத்திரிகைகளில் படித்துதான் தெரிந்து கொண்டேன். மேலும், சூர்யா தரப்பில் இருந்து அந்த படம் சம்பந்தமாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
* காமெடியன்கள் ஹீரோவாக நடிக்கும் காலமாயிற்றே? மீண்டும் ஹீரோவாக அரிதாரம் பூசுவீர்களா?
சினிமாவைப்பொறுத்தவரை எந்த காலத்திலும் கதைக்காகத்தான் படங்கள் ஓடி வருகின்றன. நடிகர்களுக்காக மட்டுமே படங்கள் ஓடிவிடுவதில்லை. அதோடு, கதைகள் என்று வருகிறபோது அந்த கதைக்கு பொருத்தமானவர்கள் நடிக்க வேண்டும். அப்படி காமெடியனான நாகேஷ் நடித்த எதிர்நீச்சல், ரவிச்சந்திரன், முத்துராமன் நடித்த காதலிக்க நேரமில்லை, பாண்டியராஜன் நடித்து இயக்கிய ஆண்பாவம், லிவிங்ஸ்டன் நடித்த சொல்லாமலே, சமீபத்தில் கோலிசோடா உள்பட பல படங்கள் கதைக்காகவே ஓடின. அந்த கதைகளில் அந்த நடிகர்கள் நடித்தினால்தான் இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமானது.
அதனால் எப்போதுமே கதைக்கு பொருத்தமான நடிகர்கள் நடிக்கிறபோதுதான் அந்த கதைகள் வெற்றி பெறும். அதனால் நான் எதிர்காலத்தில் குணசித்ர நடிகராக நடிப்பதையோ, ஹீரோவாக நடிப்பதையோ கிடைக்கிற கதைகள்தான் முவு செய்ய வேண்டும். எனக்கு பொருத்தமான கதைகள் அமைந்தால் ஹீரோவாகவும் நடிப்பேன். எதுவாக இருந்தாலும், காலத்தின் கையிலும், கதைகளின் கையிலும்தான் முடிவு உள்ளது என்கிறார் சத்யன்.