மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிம்பு எப்போது என்ன செய்வார் என்பதை யாராலுமே புரிந்து கொள்ள முடியாது என்று அவரை நன்கு அறிந்த அவரது நண்பர்கள் சொல்வார்கள். சிம்புவின் நடவடிக்கையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இதில் உள்ள உண்மை புரியும். நயன்தாராவை காதலித்தது, பிறகு பிரிந்தது,ஹன்சிகாவை காதலித்தது, அவரையும் பிரிந்தது, மீண்டும் நயன்தாரா உடன் நெருக்கம் காட்டுவது என சிம்புவின் அனைத்து செயல்களுமே மற்றவர்களின் யூகங்களுக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கும்.
ஒரு படத்தில் நடிப்பார். திடீரென அந்தப் படத்தை அப்படியே போட்டுவிட்டு வேறு படத்தில் நடிக்கப்போவார். பிறகு அந்தப் படத்தை மறந்தவிட்டு புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஆரம்பிப்பார். சிம்புவின் இந்த குணம் மற்றவர்களுக்கு பெரும் தலைவலியாய் மாறியபோதும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதே இல்லை. இதோ இப்போதும் ஒரு தலைவலியைக் கொடுத்திருக்கிறார் சிம்பு.
தலைவலி யாருக்கு? அவரை வைத்து படம் எடுப்பவர்களுக்குத்தான். கௌதம் மேனன், பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. அதோடு வாலு படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பும் பாக்கி இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று தன் ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டிருக்கிறார். உச்சந்தலையில் மட்டும் முடிகளை வைத்துக்கொண்டு, பக்கவாட்டு முடிகளை மழித்து உள்ளார். கண்டினியூட்டி பற்றி கவலைப்படாமல் இப்படி ஹேர்ஸ்டைலை மாற்றிவிட்டாரே என்ற அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அவரை வைத்து படம் இயக்கி வரும் இயக்குநர்கள்.