கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
“சாந்தினி பார், டிராபிக் சிக்னல், ஃபேஷன், பேஜ் 3, கார்ப்பரேட், ஹீரோயின்” உள்ளிட்ட வித்தியாசமான பல படங்களை இயக்கி, தேசிய விருது பெற்ற இயக்குனரான மதுர் பண்டார்கர் 'கேலண்டர் கேர்ள்ஸ்' என்ற புதிய படத்தின் படப்பிடிப்பை நேற்று முதல் ஆரம்பித்தார். இந்த படத்தில் 5 புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார். வெறும் 40 நாட்களில் படத்தை எடுத்து முடிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் படம் யூத்ஃபுல்லான படமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் மாடலாக இருந்து நடிகையான தீபிகா படுகோனேவை அணுகியதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்தாகவும் செய்திகள் வெளியாகின. மதுர் பண்டார்கர் கடைசியாக இயக்கி 2012ல் வெளிவந்த 'ஹீரோயின்' படத்தில் கரீனா கபூர் நாயகியாக நடித்திருந்தார்.
'சாந்தினி பார்' படத்தில் தபு, 'சட்டா' படத்தில் ரவீணா டான்டன், 'பேஜ் 3' படத்தில் கொங்கனா சென், 'கார்ப்பரேட்' படத்தில் பிபாஷா பாசு, 'ஃபேஷன்' படத்தில் பிரியங்கா சோப்ரா, 'ஹீரோயின்' படத்தில் கரீனா கபூர் என, பெண்களை முன்னிலைப்படுத்தியே படங்களை இயக்கிய மதுர் இந்த முறை முற்றிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார்.முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான களத்தைக் கையாள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.