பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பழம்பெரும் நாடக, திரைப்பட நடிகரும், திரைப்பட இயக்குனருமான கோவை கதிரொலி காலமானார். அவருக்கு வயது 83. இயக்குனர் கோவை கதிரொளி தெய்வம் பேசுமா?, அன்னையின் ஆணை, முக்கனிகள், கங்கை அவள் கண்ணுக்குள், வெளிச்சத்துக்கு வாங்க உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். எம்.ஆர்.ராதா நடித்த நாகமலை அழகி படத்தினை இயக்கியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர்., தந்தை பெரியார், லெனின் போன்றவர்களின் வேடங்களில் நாடகத்தில் நடித்து புகழ்பெற்ற இவருக்கு நடிகர் சங்கம் கலைச்செல்வம் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை கதிரொளி நேற்று (4ம் தேதி) காலமானார். இவருக்கு ரோஸி என்ற மனைவியும், கே.ஆர்.செல்வராஜ் என்ற மகனும் உள்ளனர். கே.ஆர்.செல்வராஜ் தென்னிந்தி நடிகர் சங்க துணைச் செயலாளராக இருக்கிறார். இவர் இளைஞரணி உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
மறைந்த கோவை கதிரொளியின் உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள், நடிகர் - நடிகைகள் அஞ்சலி செலுத்தினார்கள்.