ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதன்பிறகு இயக்கிய படம் வாகை சூடவா. இந்தபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தில் அவரது பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் ஹிட்டானது. ஆனால் அதன்பிறகு அவர், வத்திக்குச்சி, நய்யாண்டி, குட்டிப்புலி என சில படங்களுக்கு இசையமைத்தார். அந்த பாடல்கள் ஹிட்டாகவில்லை.
இருப்பினும், வாகை சூட வா பாடலை அந்த படம் வெளியான நேரத்திலேயே கேட்டிருந்த கமல், தனது விஸ்வரூபம் 2 படத்திற்கு ஜிப்ரானை இசையமைப்பாளராக புக் பண்ணினார். அது மட்டுமின்றி, உத்தமவில்லன், த்ரிஷ்யம் தமிழ் ரீமேக் ஆகிய படங்களுக்கும் தொடர்ச்சியாக புக் பண்ணி மற்ற இயக்குனர்களை எல்லாம் ஜிப்ரானை திரும்பிப்பார்க்கும்படி செய்து விட்டார் கமல்.
விளைவு, ஒரே இசையமைப்பாளரை தொடர்நது 3 படங்களுக்கு கமல் புக் பண்ணியிருக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ விசேஷ திறமை உள்ளது என்று இப்போது மற்ற இயக்குனர்களும் அவரை நாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், புத்தகம் படத்தையடுத்து அமரகாவியம் படத்தில் நடித்துள்ள ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கவிருக்கும் சென்னை சிங்கப்பூர் என்ற படத்திற்கும் தற்போது ஜிப்ரான்தான் ஒப்பந்தமாகியுள்ளார்.