ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சூர்யா, தனது 39வது பிறந்தநாளை இன்று(ஜூலை 23ம் தேதி) கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் அஞ்சான் பாடல்களோடு ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் வஸந்த்தால், நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. அதன்பிறகு அவர் நடித்த சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும், துவண்டு விடாத சூர்யா நம்பிக்கையோடு அடுத்தடுத்த படங்களில் நடித்தார். பாலா இயக்கிய நந்தா படம் மூலம் சூர்யா எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து பிதாமகன், காக்க காக்க, பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், சிங்கம் என ஹிட் படங்களில் நடித்த சூர்யா முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்நிலையில் சூர்யா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவில் 17 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூர்யா, தற்போது அஞ்சான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தமாதம் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று எளிமையாக நடந்தது. இதில் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு சூர்யா உள்ளிட்ட அஞ்சான் படக்குழுவினரை வாழ்த்தினர்.
சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்றே ஆரம்பமாகிவிட்டது. அதாவது அவர் நடித்துள்ள அஞ்சான் படத்தின் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதனால் இந்தாண்டு சூர்யாவின் ரசிகர்கள் அஞ்சான் பாடல்களோடு கொண்டாடி வருகின்றனர். மேலும் ரத்ததானம் உள்ளிட்ட நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா...!