ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2013ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சி.ஆர்.நம்பர் 89 என்ற படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பகத்பாசில், லால் இருவரும் சிறந்த நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆன் அகஸ்டின் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கேரள அரசின் விருது தேர்வு கமிட்டி தலைவராக இருந்து பாரதிராஜா இந்த விருதுகளை தேர்வு செய்தார்.
இந்த நிலையில் 2013ம் ஆண்டுக்கான விருதுகள் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் பேரறியாதவர் என்ற படத்தை தயாரித்த அனில்குமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். "விருது பரிசீலனைக்கு தேர்வாகியிருந்த 85 திரைப்படங்களையும் தேர்வுகுழு தலைவராக இருந்த பாரதிராஜாவும், குழு உறுப்பினர்களும் முழுமையாக பார்க்கவில்லை. அவசரகோலத்தில் விருதுகளை அறிவித்துள்ளனர். எனவே இந்த விருது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார்.
இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தேர்வுகுழு தலைவர் பாரதிராஜா மற்றும் தேர்வுகுழு உறுப்பினர்கள் 9 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. பத்து நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது.