Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் த்ரிஷ்யத்திற்கு கேரள கோர்ட் தடை

23 ஜூலை, 2014 - 12:02 IST
எழுத்தின் அளவு:

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் தற்போது தமிழில் கமலஹாசன் நடிக்க ரீமேக் ஆக இருக்கிறது. மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்தான், தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். நடிகை ஸ்ரீப்ரியாவும், பாலாஜி மகன் -சுரேஷ் பாலாஜியும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து படப்பிடிப்புகள் தொடங்குகிறது.


இந்த நிலையில் த்ரிஷ்யம் ஒரு ஜப்பானிய படத்தின் காப்பி. அதன் ரீமேக் உரிமை என்னிடம் இருக்கிறது. எனவே த்ரிஷியத்தை இந்தியில் ரீமேக் செய்யக்கூடாது என்று இந்தி இயக்குனர் ஏக்தா கபூர் நோட்டீஸ் அனுப்பினார். தற்போது மலையாள இயக்குனரும், எழுத்தாளருமான சதீஷ்பால் என்பவர் எர்ணாகுளம் கோர்ட்டில் த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக்கிற்கு தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த பிரச்னைக்கு முடிவு எட்டப்படும் வரை தமிழ் ரீமேக்கிற்கு தடை விதித்தது.


சதீஷ்பால் தாக்கல் செய்துள்ள மனுவின் சுருக்கம் வருமாறு: 2009ம் ஆண்டு நான் எழுதிய ஒரு மழை காலத்து என்ற கதை தான் த்ரியஷமாக வந்துள்ளது. 2013ம் ஆண்டு அந்த ஸ்கிரிப்டை படமாக்க பல தயாரிப்பாளர்களை அணுகினேன். அதில் த்ரிஷ்யம் தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பாவூரும் ஒருவர். அந்த ஸ்கிரிப்டைத்தான் த்ரிஷ்யமாக தயாரித்துள்ளார். அதையே இப்போது தமிழில் தயாரிக்க உள்ளனர். த்ரிஷ்யத்தை ரீமேக் செய்ய தடைவிதிக்க வேண்டும். த்ரிஷயத்தின் லாபத்தில் சம பங்கு தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.


இதுதொடர்பாக படத் தயாரிப்பிடம் கேட்டபோது "ஒரு வெற்றி பெற்ற படத்தின் மீது பலர் உரிமை கொண்டாடுவதும், வழக்கு போடுவதும் சகஜம்தான். நிறைய பேர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வோம்" என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in