ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரபரப்புக்காக எதையாவது கிளப்பி விடுவதில் நம்மவர்களை மிஞ்சுவதற்கு ஆட்கள் கிடையாது. ரஜினி மீண்டும் 'லிங்கா' படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின. இதற்காக 250 கோடி ரூபாய் பட்ஜெட்டுடன் ஷங்கர் தயாராகி வருகிறார் என்றனர்.
இதனிடையே 'எந்திரன் 2'ம் பாகத்தில் அமீர் கான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், தனக்கு அப்படி எதுவும் எண்ணமில்லை என்று அமீர்கான் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி 'எந்திரன் 2'-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவி விரைவில் அவருடைய 150 வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார். அதற்காக அவர் பல கதைகளைக் கேட்டு வருகிறார். இதனிடையே ஷங்கர் அவரைச் சந்தித்து 'எந்திரன் 2'ம் பாகத்தின் கதையைக் கூறியதாகவும் அந்த படத்தில் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
'ஐ' படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் ஷங்கர் பிஸியாக உள்ளதால், அவரே 'எந்திரன் 2' படத்தைப் பற்றி வாய் திறந்தால் தவிர அந்த படத்தைப் பற்றி பல வதந்திகள் வந்து கொண்டுதானிருக்கும்.