ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கடந்த சில போட்டிகளில் நட்சத்திர வீரரான விராட் கோலி சொதப்பி வருகிறார். இதைத் தொடர்ந்து லண்டன் மீடியாக்கள் விராட் கோலியின் சொதப்பலுக்கு காரணம் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாதான் என்று துப்பறிந்து எழுதி உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா போட்டி இல்லாத நேரங்களில் விராட் கோலியுடன் நேரத்தை செலவிடுகிறார். இருவரும் தனிமையில் ஊர் சுற்றுகிறார்கள். இதனால் விராட்கோலியால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை என லண்டன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் லண்டனில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருவர் மீதும் கடுப்பில் உள்ளனர்.
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் ஒரு விளம்பர படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு இருவரும் நெருக்கமாக இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. "இந்தி நடிகைகள் சுயம்வரம் நடத்தினால் யார் கழுத்தில் மாலையிடுவீர்கள்?" என்று கேட்டதற்கு "அனுஷ்கா சர்மா கழுத்தில்" என்று டக்கென்று பதில் சொன்னார் விராட் கோலி. கிரிக்கெட்டையும், சினிமாவையும் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது போலிருக்கிறது.