ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'கிக்' படத்திற்கான ஒரு நிகழ்ச்சியில் சல்மான் கான் பாதுகாவலர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களும் சண்டை ஏற்பட்டது. சல்மான்கானின் பாதுகாவலர்கள் புகைப்படக் கலைஞர்களை தாக்கியதால், இனி, சல்மான் கான் நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்வதில்லை என்று புகைப்படக் கலைஞர்கள் முடிவெடுத்தனர். அவருடைய நிகழ்ச்சிகளில் புகைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்வதற்கும் அவர்களது சங்கம் மூலமாகவும் தடை விதித்தனர்.
இது குறித்து முதலில் வெறுப்பாகக் கருத்து தெரிவித்திருந்தார் சல்மான் கான். இந்த நிலையை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்தால் எனக்கும் நல்லது என்றெல்லாம் கருத்து தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் புகைப்படக் கலைஞர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தையெல்லாம் நடத்தினர். ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனிடையே இந்த பிரச்சனை குறித்து இப்போது சல்மான் கான் வேறு விதமாக கருத்துத் தெரிவித்துள்ளார். “நீங்கள் சல்மான் கானை புகைப்படம் எடுக்க மாட்டேன் என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், என்னைப் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை. என்னை நீங்கள் புகைப்படம் எடுக்காததால் எனது நட்சத்திர அந்தஸ்து குறைந்துவிடப் போவதில்லை,” என்றும் கூறியிருக்கிறார்.
“50 அடி தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கும் அளவிற்கு லென்ஸ்கள் உள்ளன. அதை விடுத்து எனது அருகில் வந்துததான் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் எப்படி சம்பளம் வாங்குகிறார்களோ, அதைப் போலவே எனது பாதுகாவலர்கள் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்காக வேலை செய்கிறார்கள். பல புகைப்படக் கலைஞர்கள் என்னிடம் வந்து ஒரு ஃபோட்டோ எடுத்தால் 150 ரூபாய் கிடைக்கும் என்று சொல்வார்கள். ஐந்து நிமிடம் அவர்கள் முன்னால் நின்றால் அவர்களுக்கான சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஐந்து நிமிடம் அவர்கள் முன் நிற்கிறேன், அப்புறம் என்ன வந்தது?. ஆனாலும், அவர்கள் எனக்காகவும் புகைப்படம் எடுக்கிறார்கள் என்றும் யோசித்தேன்,” என்று கூறுகிறார்.
இனி, சல்மான் கான் தனிப்பட்ட புகைப்படக் கலைஞர்களை நியமித்து அவருடைய புகைப்படங்களை பத்திரிகைகளுக்குத் தர முடிவெடுத்திருக்கிறாராம். இதனால், தொழில் ரீதியான புகைப்படக் கலைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.