ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் நாட்டில் நாத்திக கருத்துக்களையும், சீர்திருத்த கருத்துகளை பேசியும், பரப்பியும் வந்த பெரியாரின் வாழ்க்கையை இயக்குனர் ஞானராஜசேகரன் 2005ம் ஆண்டு பெரியார் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். இந்தப் படத்திற்கு அப்போதிருந்து தி.மு.அரசு 95 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது. அதேபோல மம்முட்டி நடித்த அப்பேத்கர் படத்தை தமிழில் டப் செய்ய 10 லட்சம் ரூபாய் வழங்கியது.
தற்போது பெரியார் படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் கணித மேதை ராமானுஜன் வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளார். கணிதத்தில் இன்னும் விடுவிக்கப்படாத புதிர்களை தனது 33 வயதுக்குள் போட்டு இந்த உலகத்திற்கு தந்து விட்டுப்போனவர் ராமானுஜன். இன்றுள்ள ஏடிஎம் மிஷன் பாஸ்வேர்டு போன்ற டெக்னாலஜிக்கு அவரது கண்டுபிடிப்புகளே மூல காரணம். அப்படிப்பட்ட ஒரு மேதையின் படம் திரைப்படமாக வந்திருக்கிறது.
எந்த பக்கமும் சாயாமல் யாரையும் குறை சொல்லாமல் அவரது வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் ஞானராஜசேகரன். குழந்தைகள் மீது திணிக்கப்படும் கல்வி. மணப்பாடம் செய்யும் மனித எந்திரங்களை உற்பத்தி செய்யும் கல்வி கூடங்களையும் படம் பிரதிபலிக்கிறது. பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு மாணவனும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
தமிழ் நாட்டு மக்கள் நல்ல படத்துக்கு எப்போதும் அவ்வளவு சீக்கிரத்தில் வரவேற்பு தர மாட்டார்கள். அந்த நிலைதான் தற்போது ராமானுஜன் படத்திற்கும் இருக்கிறது. நாளை மாறலாம். மாற வேண்டும். பெரியார் படத்திற்கு அரசு வழங்கியதை போன்ற ஒரு நிதியை இந்தப் படத்துக்கும் வழங்கி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பார்க்க உதவ வேண்டும் என்பதே பொதுமக்களின் எண்ணம். சம்பந்தப்பட்டவர்கள் நல்லெண்ணத்துடன் முயற்சி செய்தால் நடக்க வாய்ப்பிருக்கிறது.