மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் நடித்து வெள்ளிவிழா கண்டு, ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடிய படம் மலையூர் மம்பட்டியான். அந்த படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக சரிதா, சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி ஆகியோர் நடித்தனர். ஜெய்சங்கர், செந்தாமரை, சங்கிலிமுருகன், கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்தனர். அப்போதே பல மொழிகளில் நேரடி படமாக தயாராகி வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான், மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரசாந்த கதாநாயகனாக நடிக்க, ஏராளமான பொருட்செலவுடன் தயாராகி வருகிறது. இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார் தியாகராஜன். ரீ-மேக் மலையூர் மம்பட்டியான் படம் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ்:-
* தான் கதாநாயகனாக நடித்த படத்தை, தனது மகனை நடிக்க வைத்து, அதனை தானே இயக்கி தயாரிப்பது சினிமா வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.
* படத்தில் மம்பட்டியானாக பிரசாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக சரிதா நடித்த வேடத்தில் மீரா ஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் முமைத்கானும், சில்க் நடிக்க வேடத்தில் மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக ஜெய்சங்கர் நடித்த வேடத்தில் பிரகாஷ் ராஜ், கவுண்டமணி வேடத்தில் வடிவேலு, சங்கிலி முருகன் நடித்த போலி மம்பட்டியான் வேடத்தில் ரியாஸ்கான், பண்ணையாராக செந்தாமரை நடித்த வேடத்தில் கோட்டா சீனிவாசராவ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
* மம்பட்டியான் வேடத்திற்காகவே நீண்ட தலைமுடியுடன் உள்ள பிரசாந்த், பிரத்யேகமான உடற்பயிற்சி மேற்கொண்டு, உணவுக் கட்டுப்பாடுகளுடன் அசப்பில் அப்பா தியாகராஜன் நடித்த மம்பட்டியானாகவே வாழ்ந்து வருகிறார்.
* இந்தியாவில் மைசூர், கேரளா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பயங்கர காடுகளில் மட்டுமல்லாமல் நியூசிலாந்து, தாய்லாந்து மற்றும் கிழக்கு ஆப்ரிக்க காடுகளிலும் மம்பட்டியானை படமாக்கியிருக்கிறார் தியாகராஜன்.
* காட்டில் உலாவும் காட்டெருமை மற்றும் யானைகளுடன் பிரசாந்த் சண்டை போடுவது போன்ற காட்சிகள் பார்ப்பவர்களை அசர வைக்கும் என்கிறார் தியாகராஜன்.
* முமைத்கான் - பிரசாந்த் மற்றும் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்கும் ஒரு பாடல் காட்சியை வித்தியாசமான நடன அசைவுகளுடன் உருவாக்கியிருக்கிறார் நடன இயக்குனர் பிரபுதேவா.
* வின்னர் படத்தில் பிரசாந்த் - வடிவேலு கூட்டணியின் காமெடி காட்சிகளில் கலக்கியதை விட பல மடங்கு மம்பட்டியானில் கலக்கியிருக்கிறார்கள். வயிறு குலுங்க அனைவரும் சிரிக்கப்போகும் காமெடி காட்சிகள் மம்பட்டியான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.
* பிரசாந்த் மற்றும் பிரகாஷ்ராஜ் மோதும் சண்டைக்காட்சிகள் மயிர்க் கூச்செரியும் விதமாக அமைந்துள்ளது. க்ளைமாக்ஸில் மம்பட்டியானை துரத்தும் காட்சிகளை படமாக்க 5 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
* ராக்கி ராஜேஷ், சுப்ரீம் சுந்தர் என 2 சண்டை இயக்குனர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாருடன் மம்பட்டியான் பிரசாந்த் மோதும் காட்சிகளை நவீன யுத்திகளை கையாண்டு 6 காமிராக்களின் உதவியுடன் படமாக்கியுள்ளனர்.
* நா.முத்துக்குமார், அண்ணாமலை எழுதிய பாடல்களுக்கு முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைத்துள்ளார்.
* கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குவதுடன் ஆர்ட் டைரக்டர் பணியையும் தியாகராஜனே ஏற்றிருக்கிறார்.
* ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பொறுப்பை டான் மேக்ஸ் ஏற்றுள்ளார்.
* 12 கோடி ரூபாய் செலவில் விறுவிறுப்பாக தயாராகி வரும் மம்பட்டியான் படம் பிரசாந்துக்கு இப்படம் மிகப்பெரிய திருப்பமாக அமையும் என்று அவரது தந்தை தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- தினமலர் சினி டீம் -