திருடன் போலீஸ் என் வியாபார வட்டத்தை பெருசுபடுத்தும்! - அட்டகத்தி தினேஷ் நம்பிக்கை
11 ஜூலை, 2014 - 13:52 IST
அட்டகத்தி படத்தில் அறிமுகமானவர் தினேஷ். அதையடுத்து குக்கூ என்ற படத்தில் கண் பார்வையில்லாதவராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படங்களை அடுத்து தற்போது தினேஷ் நடித்துள்ள படம் திருடன் போலீஸ. இப்படத்தை கார்த்திக்ராஜூ என்ற புதியவர் இயக்கியுளளார். எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள இபபடத்துக்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.
தினேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ், நரேன், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், வெற்றிமாறன், எம்.ராஜேஷ், நடிகர் ஸ்ரீமன், நடிகை நந்திதா உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் தினேஷ் பேசும்போது, அட்டகத்தி படம் என்னை ரசிகர்களிடம் ஒரு ஜனரஞ்சகமான நடிகனாக கொண்டு சேர்த்தது. அந்த வகையில் முதல் படமே ஹிட்டானதால் பேசப்பட்டேன்.. அதையடுத்து குக்கூ படத்தில் கண் பார்வையில்லாத வேடத்தில் நடித்தேன். அதற்காக ரொம்ப கஷ்டப்பட்டேன். அதற்கான பலனையும் அந்த படம் பெற்றுத்தந்தது.
அதன்பிறகுதான் தினேசுக்கு நடிக்கவும் தெரியும் என்று டைரக்டர்கள் முடிவு செய்தனர். அதையடுத்து என்னைத்தேடி வந்த படங்களில் நான் அதிகமாக விரும்பி ஏற்று நடித்துள்ள படம்தான் திருடன் போலீஸ்.இந்த படத்துக்காக ஒரு போலீஸ் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி எனது பாடிலாங்குவேஜ, ஹேர்ஸ்டைல் என அனைத்தையும பக்காவாக மாற்றி நடித்துள்ளேன்.
கதைப்படி, நேர்மையான ஏட்டுவாக நடித்துள்ள எனது தந்தை நரேனை கொலை செய்து விடுவார்கள். அதையடுத்து நான் ஏட்டுவாகி தந்தையை கொலை செய்தவர்களை பழிவாங்கும் வேடத்தின் நடித்தபோது வெறித்தனமாக நடித்தேன். குறிப்பாக, சண்டை காட்சிகளில் என்னையுமறியாமல் வில்லன்களை நிஜமாலுமே அடித்தேன். அதனால் சண்டை காட்சிகளில் அதிக தத்ரூபமாக வந்திருக்கிறது. அநதவகையில், திருடன் போலீஸ் படம் என்னை ஒரு ரியல் நடிகனாக வெளிப்படுத்துவதோடு, எனது வியாபார வட்டத்தையும் பெருசுபடுத்தும் என்று நம்புகிறேன் என்கிறார் தினேஷ்.