ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவின் பிரபல கிராபிக்ஸ் நிபுணர் கார்த்திக்ராஜு. ஜீன்ஸ், அந்நியன், தசாவதாரம் படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்தவர். அவர் இப்போது திருடன் போலீஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். அட்டகத்தி ஜோடி தினேஷ், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். எஸ்.பி.பி.சரண் தயாரிக்கிறார். கிராபிக்ஸ் நிபுணர் இயக்கும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லையாம்.
இது பற்றி இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது: இந்தப் படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் தேவைப்படவில்லை. சின்ன சின்ன வேலைகள் இருக்கும் அது கண்ணுக்குத் தெரியவே தெரியாது. இது யதார்த்தமான ஒரு படம். பாடல் காட்சிகளில் ஸ்டூடியோவில் எடுத்துவிட்டு சுவிட்சர்லாந்தில் எடுத்ததாக காட்டலாம். ஆனால் அதில் ஜீவன் இருக்காது. அதனால் அந்த முயற்சியை எடுக்கவில்லை.
போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதால் திருடன் போலீஸ் என்று டைட்டில் வைத்திருக்கிறேன். ஒரு போலீஸ் காலணியில் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனரும் வசிக்கிறார், ஏட்டும் வசிக்கிறார். ஏட்டுவின் மகன்தான் ஹீரோ. அசிஸ்டெண்ட் கமிஷனரின் மகன் காலணிக்குள் செய்யும் ஒரு தவறை ஏட்டு கண்டுபிடிக்கிறார். நேர்மையான ஏட்டு தன் மகனை காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று அஞ்சும் அந்த அதிகாரி ஏட்டை ரவுடிகளை வைத்து கொன்று விடுகிறார். அப்பாவின் வேலை மகனுக்கு கிடைக்கிறது. எதற்கும் உதவாத ஹீரோவுக்கு ஏட்டு வேலை கிடைத்ததும் பொறுப்பு வருகிறதா. தன் அப்பாவை கொன்றவர்களை அவர் பழிவாங்கினாரா இல்லையா என்பதுதான் கதை. ரொம்ப ஜாலியான அதே நேரத்தில் உண்மையை சீரியசாக பேசுகிற படம் என்கிறார் கார்த்திக் ராஜு.