ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிப்ரா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் மானாட மயிலாட மைக்கேல் - அட்டகத்தி நந்திதா நடித்த நளனும் நத்தினியும் படம் நாளை வெளிவர உள்ளது. இதற்கு முன் பல தடவை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பிறகு தள்ளி வைக்கப்பட்ட நளனும் நத்தினியும் இம்முறை நிச்சயம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது. அந்த நம்பிக்கையில்தான் ரிலீஸுக்கு சில தினங்கள் முன்பாகவே மீடியாக்களுக்கு பிரிவ்யூ ஷோ போடப்பட்டது. நளனும் நத்தினியும் படத்தை தமிழகம் முழுக்க 135 தியேட்டர்களில் திரையிட அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் திட்டமிட்டிருக்கிறார். அதனடிப்படையில் தமிழகம் முழுக்க தியேட்டர்களை புக் பண்ணிவிட்டார்.
சென்னையில் உள்ள தியேட்டர்கள் மட்டும் வாக்கு கொடுத்தபடி தியேட்டர்களை தரவில்லையாம். குறிப்பாக சென்னையில் உள்ள மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் நளனும் நத்தினியும் படத்துக்கு 4 காட்சிகளை ஒதுக்க மறுப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். காலை 11 மணி காட்சி அல்லது இரவு 10 மணி காட்சி மட்டுமே தர முடியும் என்று சொல்கிறார்களாம் மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்காரர்கள். பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ரெகுலர் ஷோவுக்கு தியேட்டர் தர மறுக்கிறார்களாம். அதனால் கடந்த சில நாட்களாக தூங்காமல் தவித்து வருகிறார் ரவீந்தர் சந்திரசேகரன்.
நளனும் நத்தினியும் படத்தை வெளியிட்ட பிறகு, படத்யாரிப்பை நிறுத்திவிட்டு மாதம் ஒரு படத்தை வாங்கி வெளியிடும் திட்டத்தை வகுத்திருந்தார் ரவீந்தர் சந்திரசேகரன். தற்போது தியேட்டர்காரர்களுடன் ஏற்பட்ட அனுபவத்துக்குப் பிறகு என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை!