ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் படங்களை இயக்கிய மூர்த்தி தன் பெயரை கோவிந்தமூர்த்தி என்று மாற்றிக் கொண்டு இயக்கியுள்ள படம் பப்பாளி. டி.வி.நடிகர் செந்தில், இஷாரா நடித்துள்ளனர். வருகிற 11ந் தேதி படம் ரிலீசாகிறது. "பப்பாளி என்கிற டைட்டில் ஒரு அட்ராக்ஷனுக்குத்தான் வைத்திருக்கிறோம். படத்தின் கதைக்கும் பப்பாளிக்கும் சம்பந்தம் இல்லை" என்று வெளிப்படையாகவே சொல்கிறார் இயக்குனர் கோவிந்தமூர்த்தி.
மேலும் அவர் கூறியதாவது "கல்வியின் மேன்மையை சொல்லுகிற படம். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஐ.ஏ.எஸ் ஆவதை லட்சியமாக கொண்டு அதை எப்படி அடைகிறான் என்பதுதான் கதை. கல்வியே தெய்வம் என்ற தலைப்புதான் பொருத்தமான தலைப்பு. அந்த தலைப்பை வைத்தால் யார் தியேட்டருக்கு வருவார்கள். அதனால் பப்பாளி என்று வைத்திருக்கிறோம். முதலில் கடலை என்றுதான் தலைப்பு வைப்பதாக பதிவு செய்து வைத்திருந்தேன். அதை ரினீவல் பண்ணாமல் விட்டுவிட்டதால் இன்னொருவர் எடுத்துக் கொண்டார்.
நல்ல விஷயத்தை காமெடி கலந்து தருகிறேன். வடிவேலுவை வைத்து படித்துறை பாண்டி, அலார்ட் ஆறுமுகம் கேரக்டர்களை உருவாக்கினேன். இந்தப் படத்துக்கு அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அதனால் சிங்கம்புலியை கொண்டு புதிய கேரக்டர் ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். அதுவும் வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்" என்கிறார் கோவிந்த மூர்த்தி.