ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா ஒரு காலத்தில் ஸ்டுடியோக்களில்தான் முடங்கிக்கிடந்தது. பாரதிராஜாவின் வரவுக்குப்பிறகுதான் கூண்டுக்குள் அடைபட்டுக்கிடந்த சினிமாக்காரர்கள் அனைவரும் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறி சுதந்திரமாக வெளிச்சமான வயல்வெளிகளுக்கு வந்தனர். அதேபோல், அப்போதெல்லாம் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள், பிரஸ் ஷோக்கள், விழாக்கள் ஆகியவற்றை பிரிவியூ தியேட்டர்களில்தான் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தியன் படத்திற்கு பிறகு இன்னொரு மாற்றம் நிகழ்ந்தது.
அதாவது, முதன்முறையாக இந்தியன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடத்தினார் அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம். அதன்பிறகுதான் பிரிவியூ தியேட்டர்களை விட்டு மற்ற படங்களும் பெரிய அளவில் மக்கள் கூடும் தியேட்டர்களில் சினிமா நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினர்.
இதை நேற்றைய தினம் சென்னையிலுள்ள அதே சத்யம் தியேட்டரில் நடைபெற்ற தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்திருந்தபோது தெரிவித்த ஏ.எம்.ரத்னம். நான் தொட்டது எதுவுமே துலங்காமல் இருந்ததில்லை. அதனால்தான் 24 மணி நேரமும் நான் சுவாசிக்கும் சினிமா எதிர்பாராதவிதமாக சில சறுக்கல்களை தந்தபோதும், என்னை கைவிடவில்லை. தல அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை தொடங்கி இப்போது மீண்டும் அவர் நடிக்கும் 55வது படத்தையும் இயக்கி வருகிறேன். அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கவிருக்கிறேன்.
அந்த வகையில், என் ராசி, நான் தொட்டது எதுவுமே விட்டுப்போனதில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் அது தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்றார் ஏ.எம்.ரத்னம்.