சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |
எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் வசூலித்தன. அதிலும் ஆயிரத்தில் ஒருவன் சென்னையிலுள்ள இரண்டு தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. இந்த நிலையில், ரஜினி-கமல் நடித்த 16 வயதினிலே படத்தையும் டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளரான ராஜ்கண்ணு களமிறங்கினார். அதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்த விழாவில் ரஜினி, கமல், பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், படத்தை வெளியிட தயாரானபோது, அப்படத்தின் சார்ட்டிலைட் உரிமத்தை வைத்திருக்கும் ஒரு சேனல், இவர்கள் படத்தை வெளியிடும்போது தாங்களும் 16 வயதினிலே படத்தை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டிருப்பது ராஜ்கண்ணுக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அப்படி செய்தால் தியேட்டர்களுக்கு கூட்டம் வராதே என்று படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் செய்திருக்கிறார்.
இதன்காரணமாக, அப்படத்தை தானே தமிழ்நாடு முழுவதும் வெளியிடுவதாக கூறியிருந்த ஒரு பிரபல தயாரிப்பாளர், அந்த சேனல் 16 வயதினிலே படத்தை வெளியிட தயாராகி விட்டதை அறிந்து, பின் வாங்கி விட்டாராம். அதனால்தான், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்காக பல லட்சங்களை செலவு செய்து விட்டு, போட்ட காசை எப்படி எடுப்பது என்று தற்போது தடுமாறிக்கொண்டு நிற்கிறார் ராஜ்கண்ணு. அதையடுத்து, இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால், சம்பந்தப்பட்ட சேனலிடம் நட்பு ரீதியான பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.