சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள சினிமாவில் தனது ரசிகர்கள் ஒரு டைரக்டரை விமர்சித்ததால்தான் சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்றங்களையே கலைத்து விடுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் மம்மூட்டி. அதேபோல் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வாக்கு சேகரித்ததால்தான் தனது ரசிகர் மன்றங்களையே கலைப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார் அஜீத்.
ஆனால், விஜய்யின் ரசிகர் மன்றங்கள் பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருப்பதால், பின்னர் அஜீத்தும் மன்றங்களை இயங்குவதை தடுக்கவில்லை. இந்த நிலையில், அவர்களது படங்கள் திரைக்கு வரும்போது பட்டாசு, பாலாபிஷேகம் என்று அமர்க்களப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அதேசமயம், அஜீத் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது. விஜய் ரசிகர்கள் அஜீத்தை விமர்சிப்பது போன்ற விசயங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக சில ஊர்களில் போஸ்டர் ஒட்டுவது, கட் அவுட் வைப்பது சம்பந்தமாக அஜீத்-விஜய் ரசிகர்கள் சண்டை போட்டும் கொள்கிறார்கள்.இப்படியிருந்த நிலையில, சமீபத்தில் ஒரு வார இதழ், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ? என்ற கருத்து கணிப்பு நடத்தியதாகவும், அதில் விஜய்யே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள வாக்களித்ததாகவும் செய்தி வெளியிட்டது.
இதனால், இரண்டு பேர் ரசிகர்களும் இணையதளங்களில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். சில இடங்களில் நேருக்கு நேர் அடித்தும் கொண்டதாக தகவல் வந்துள்ளன. அதனால் இப்படியே விட்டால் ரசிகர்களுக்கிடையே கோஷ்டி மோதல் போல் பெரிய சர்ச்சையாகி விடும் என்று நினைத்த விஜய்-அஜீத் இருவரும் இந்த ரசிகர் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, விரைவில் தாங்கள் இருவரும் இணைந்து ஒரு பேட்டி கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். அப்போது நாங்கள் இருவரும் நண்பர்களாக இருப்பது போன்று நீங்களும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இது நடக்கும் என்கிறார்கள்.நடந்தால் சந்தோசமே.