ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
'ராஞ்சனா' இந்திப் படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு நடிகராகிவிட்டார் தனுஷ். அடுத்ததாக தற்போது பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்' என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடனும் இணைந்து நடித்து வருகிறார். தமிழ் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத மிகப் பெரிய வாய்ப்பு இந்தியிலும் தற்போது தனுஷுக்கு கிடைத்து வருகிறது. அங்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இனி வருடத்திற்கு ஒரு தமிழ் மற்றும் ஒரு இந்திப் படங்களில் மட்டுமே நடிக்க தனுஷ் முடிவு செய்துள்ளாராம்.
இது குறித்து அவர் கூறியதாவது, “நான் எப்போதும் சிறந்த ஒன்றையை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு படத்திற்காக மட்டுமே என்னுடைய முழு அர்ப்பணிப்பையும் தர விரும்புகிறேன். இப்போது எந்த படத்திற்கும் நான் நியாயமாக நடந்து கொள்ள முடியவில்லை என்றே நினைக்கிறேன். அதனால், இனி வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கேற்றபடி நடந்து கொள்ளப் போகிறேன். இப்போது ஒரு இந்திப் படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தமிழில் சில படங்களில் நடித்து வருகிறேன், இன்னும் இரண்டு படங்களில் நடிக்கப் போகிறேன். இவற்றையெல்லாம் முடித்து விட்டு, அடுத்த ஆண்டு முதல் புதிதாக ஆரம்பிக்க உள்ளேன். நிஜமாகவே நடிக்கும் படங்களை குறைத்துக் கொண்டு தேர்ந்தெடுத்து சில படங்களில் மட்டுமே நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன், ” என்று தெரிவித்துள்ளார்.