ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமாருக்கும் கடந்த 8ம்தேதி திருமலையில் திருமணம் நடந்தது. கோலாகலமாக நடந்த திருமணத்தில் ரம்பாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நடிகை ரோஜா, செல்வமணி, கலா மாஸ்டர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று ரம்பா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் நடந்தது. இதில் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். பிரேமலதா விஜயகாந்த், இராம.நாராயணன், ஆர்.பி.சவுத்ரி, எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், கே.டி.குஞ்சுமோன், எடிட்டர் மோகன், நடிகர்கள் எஸ்.வி.சேகர், பார்த்திபன், பாண்டியராஜன், சுந்தர் சி, அப்பாஸ், ரியாஸ் கான், வையாபுரி, சின்னி ஜெயந்த், நடிகைகள் சோனியா அகர்வால், கஸ்தூரி, சங்கவி, கோவை சரளா, உள்ளிட்ட பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் தவிர மானாட மயிலாட கலைஞர்கள் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் சிலரும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரம்பாவை வாழ்த்தினார்கள்.