கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் | ஆஸ்கர் விருது விழா : கமலுக்கு அழைப்பு | நான் கலெக்டர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா | விதார்த் நடிக்கும் ஆந்தாலாஜி கதை | ஜூலை இறுதியில் கூலி பாடல் வெளியீட்டு விழா |
இளம் பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்தவர் கபிலன். சில வருடங்களுக்கு முன், உன் சமையல் அறையில் உப்பா சர்க்கரையா..ஆல் தோட்ட பூபதி உட்பட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி வந்தார். குறிப்பாக விஜய் நடித்த அனைத்துப் படங்களிலும், அவருக்கான அறிமுகப்பாடல்களை கபிலனே எழுதினார். விஜய்யின்னு இமேஜை பில்ட்அப் பண்ணும் வகையில் கபிலன் எழுதும் வரிகள் விஜய்க்கும் மிகவும் பிடித்துப்போய், தன்னை வைத்து படம் பண்ணும் இயக்குநர்களிடம் எல்லாம் கபிலனை வைத்து அறிமுகப்பாடல் எழுத வைக்கும்படி விஜய்யே கேட்டுக்கொள்வார்.
விஜய்யைப் போலவே கமலும் கபிலனின் கவிதை வரிகளுக்கு ரசிகர். அதன் தொடர்ச்சியாய் தசாவதாரம் படத்தில கபிலனை நடிகராக்கினார் கமல். இப்படியாக மளமளவென வளர்ந்து வந்த கபிலன் என்ன காரணத்தினாலோ திடீரென காணாமல் போனார். நா.முத்துகுமார், மதன் கார்க்கி என்ற இரு பெரும் கவிதை சூறாவளியினால் காணாமல் போனவர்களில் கபிலனும் ஒருவர் என்றானது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபிலனின் பாடல் வரிகள் காதில் விழுகின்றன. கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடித்தா என்ற பாடலை எழுதி இருக்கிறார் கபிலன்.