ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளம் பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்தவர் கபிலன். சில வருடங்களுக்கு முன், உன் சமையல் அறையில் உப்பா சர்க்கரையா..ஆல் தோட்ட பூபதி உட்பட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி வந்தார். குறிப்பாக விஜய் நடித்த அனைத்துப் படங்களிலும், அவருக்கான அறிமுகப்பாடல்களை கபிலனே எழுதினார். விஜய்யின்னு இமேஜை பில்ட்அப் பண்ணும் வகையில் கபிலன் எழுதும் வரிகள் விஜய்க்கும் மிகவும் பிடித்துப்போய், தன்னை வைத்து படம் பண்ணும் இயக்குநர்களிடம் எல்லாம் கபிலனை வைத்து அறிமுகப்பாடல் எழுத வைக்கும்படி விஜய்யே கேட்டுக்கொள்வார்.
விஜய்யைப் போலவே கமலும் கபிலனின் கவிதை வரிகளுக்கு ரசிகர். அதன் தொடர்ச்சியாய் தசாவதாரம் படத்தில கபிலனை நடிகராக்கினார் கமல். இப்படியாக மளமளவென வளர்ந்து வந்த கபிலன் என்ன காரணத்தினாலோ திடீரென காணாமல் போனார். நா.முத்துகுமார், மதன் கார்க்கி என்ற இரு பெரும் கவிதை சூறாவளியினால் காணாமல் போனவர்களில் கபிலனும் ஒருவர் என்றானது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபிலனின் பாடல் வரிகள் காதில் விழுகின்றன. கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடித்தா என்ற பாடலை எழுதி இருக்கிறார் கபிலன்.