ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
இளம் பாடலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்தவர் கபிலன். சில வருடங்களுக்கு முன், உன் சமையல் அறையில் உப்பா சர்க்கரையா..ஆல் தோட்ட பூபதி உட்பட ஏராளமான சூப்பர்ஹிட் பாடல்களை எழுதி வந்தார். குறிப்பாக விஜய் நடித்த அனைத்துப் படங்களிலும், அவருக்கான அறிமுகப்பாடல்களை கபிலனே எழுதினார். விஜய்யின்னு இமேஜை பில்ட்அப் பண்ணும் வகையில் கபிலன் எழுதும் வரிகள் விஜய்க்கும் மிகவும் பிடித்துப்போய், தன்னை வைத்து படம் பண்ணும் இயக்குநர்களிடம் எல்லாம் கபிலனை வைத்து அறிமுகப்பாடல் எழுத வைக்கும்படி விஜய்யே கேட்டுக்கொள்வார்.
விஜய்யைப் போலவே கமலும் கபிலனின் கவிதை வரிகளுக்கு ரசிகர். அதன் தொடர்ச்சியாய் தசாவதாரம் படத்தில கபிலனை நடிகராக்கினார் கமல். இப்படியாக மளமளவென வளர்ந்து வந்த கபிலன் என்ன காரணத்தினாலோ திடீரென காணாமல் போனார். நா.முத்துகுமார், மதன் கார்க்கி என்ற இரு பெரும் கவிதை சூறாவளியினால் காணாமல் போனவர்களில் கபிலனும் ஒருவர் என்றானது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபிலனின் பாடல் வரிகள் காதில் விழுகின்றன. கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடித்தா என்ற பாடலை எழுதி இருக்கிறார் கபிலன்.