ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் நமீதாவை முன் வைத்து காரைக்காலில் ஒரு நடன நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. நடிகை நமீதாவின் நடனத்துடன் கூடிய உங்களில் யார் லாரன்ஸ்? என்ற நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த போட்டியை கண்குளிர கண்டுகளிக்க அந்த ஏரியாவைச்சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய அந்த நடன நிகழ்ச்சிக்கு ரூ 300 வரை டிக்கெட் தொகை கொடுத்து நமீதாவின் நடனத்தை ரசிக்க அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்களாம். ஆனால், நமீதாவை தவிர யார் யாரோ மேடையில் நடனமாடிக்கொண்டிருக்க, ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதையடுத்து, திடீரென்று நமீதாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனறு விழாவை நடத்தியவர்கள் மேடையில் அறிவித்தார்களாம்.
இதனால் அதுவரை நமீதா வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் மனசை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்த ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டார்களாம்.அதோடு, நாற்காலி, மேஜை மற்றும் விழா மேடையையும் அடித்து நொறுக்கி பெரும் கலவரத்தில் ஈடுபட்டார்களாம். அதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைத்து நமீதாவினால் ஏற்பட்ட கலவரத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இந்த கலவரம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துகூட 1 மணி நேரம் பாதிக்கப்பட்டதாம்.