14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
டைரக்டர் மு.களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் 12 நாட்கள் மட்டுமே நடித்து விட்டு மீதி படத்தில் நடிக்க மறுத்து வரும் அஞ்சலிக்கு தற்போது கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. அவர் ஒருவேளை அந்த படத்தில் நடிப்பை தொடர விரும்பாவிட்டால் அவரால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை அவர் அப்படதயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும் என்று கில்டு பொதுச்செயலாளர் ஜாக்குவார் தங்கம் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தை முடித்துக்கொடுக்காவிட்டால் வேறு எந்த படத்திலும் அஞ்சலியால் இனிமேல் நடிக்க முடியாது. காரணம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இனி அவர் எந்த மொழிகளிலும் நடிக்க முடியாத அளவுக்கு அனைத்து சினிமா சங்கங்களுக்கும் கில்டு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதேசமயம், அவர் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்க முன்வந்தால் சந்தோசமே. அப்படி நடிக்கிறபட்சத்தில் அஞ்சலிக்கு முழு பாதுகாப்பும், ஒத்துழைப்பும் கொடுக்கப்படும். அதனால் நஷ்ட ஈடு கொடுக்கிறாரா? இல்லை நடிப்பை தொடரப்போகிறாரா? என்பதை இனி அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கில்டு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவுக்கு அஞ்சலி கட்டுப்படுவாரா? இல்லையா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.