ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 149 படங்கள் நடித்திருந்த நிலையில், பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு சென்று விட்டார். ஆனால் அவர் நினைத்த மாதிரி அரசியலில் அவரால் பிரகாசிக்க முடியவில்லை. இரண்டே ஆண்டுகளில கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். நடந்து முடிந்த பாராமன்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால். சிரஞ்சீவியின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இதனால் மீண்டும் சினிமாவுக்கே திரும்புகிறார் சிரஞ்சீவி. தான் அடுத்து நடிக்கப்போகும் 150 வது படத்தின் மூலம் சினிமாவி தான் விட்டுச் சென்ற இடத்தை மீண்டும் பிடிக்க முடிவு செய்திருக்கிறார். இதற்காக சக்தி வாய்ந்த நல்ல கதையை தேடிக் கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி, உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டும் அவருக்கு எந்த கதையும் திருப்தியை ஏற்படுத்தவில்லை.
இதனால் தனது150 வது படத்திற்கு நல்ல கதை சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் தர இருப்பதாக கூறியிருக்கிறார். இதற்கென அவர் அமைத்துள்ள குழுவிடம் அவர்கள் கதை சொல்ல வேண்டும். அந்த குழுவிற்கு கதை பிடித்திருந்தால் அவர்கள் சிரஞ்சீவிடம் சொல்வார்கள். அவருக்கும் பிடித்திருந்தால் ஒரு கோடி தருவார். பின்னர் அந்த கதைக்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பை வேறொரு குழு ஏற்றுக் கொள்ளும் என்று சிரஞ்சீவி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.