மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இயக்குநர் ராம நாராயணனின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை ஒருநாள் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகளவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற சாதனை படைத்தவர் இயக்குநர் ராம நாராயணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகளில், 126 படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக விலங்குகளை வைத்து படம் எடுப்பதில் கில்லாடி. தவிர ஏராளமான சாமி படங்களையும் இயக்கியுள்ளார்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம நாராயணன் நேற்று(ஜூன் 22ம் தேதி) இரவு மரணம் அடைந்தார். சிங்கப்பூரில் இருந்து அவரது உடல், விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்பட இருக்கிறது. பின்னர் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து நாளை(ஜூன் 24ம் தேதி) அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கண்ணாமாபேட்டையில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட இருக்கிறது.
படப்பிடிப்புகள் ரத்து
ராம நாராயணனின் மறைவையொட்டி தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட பிற சங்கங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ராம நாராயணனின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை ஒருநாள் மட்டும் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.