ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராம் சுப்பாராமன் என்பவர் இயக்கியுள்ள படம் 'கண்டுபிடி கண்டுபிடி'. மூவி பஜார் என்ற நிறுவனம் தயாரித்தது. முரளி ஐஸ்வர்யா தேவன் என்ற புதுமுங்களுடன் இயக்குனர் சீமான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். ஒரு திருமண மண்டபத்தில் திடீரென மணப்பெண் காணாமல் போகிறாள். அதைத்தொடர்ந்து அந்த ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை கொண்ட கதை. இந்தப் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் அதனை வெளியிடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். அடுத்த மாதம் (ஜூலை) ரிலீசாகிறது.
இதுபற்றி படத்தின் இயக்குனர் ராம் சுப்பாராமன் கூறியதாவது: திருமண நிகழ்ச்சி என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதி அற்புதமான ஒன்று. அதில் ஒரு பிரச்னை என்றால் மொத்த குடும்பமும் கலங்கிப்போகிறது. அதை மையமாக வைத்து காமெடியாகவும், நெகிழ்சியாகவும் சொல்லப்படுகிற கதை. திண்டுக்கல் அருகே ஒரு திருமண மண்டபத்தில் ஒரு மாதம் வரை படப்பிடிப்பு நடத்தினோம். சில காரணங்களால் படத்தை உடனே வெளியிட முடியவில்லை. இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது. என்றார் ராம் சுப்பாராமன்.