ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ராஜ்கிரண். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த மஞ்சப்பை அவரது நடிப்புக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ராஜ்கிரண் அடுத்து படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர் ஆகிறார். தன் சினிமா வாழ்க்கையை விநியோகஸ்தராக தொடங்கியவர் ராஜ்கிரண்.
அவர் நடித்து அடுத்து வெளிவரப்போகும் படம் சிவப்பு. நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி நடித்துள்ளனர். தமிழ் நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் பற்றிய கதை. கழுகு படத்தை இயக்கிய சத்திய சிவா இயக்கி உள்ளார். புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ் நிறுவனமும், முக்தா ஆர்.கோவிந்தின் முக்தா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இதில் ராஜ்கிரண் இலங்கை அகதிகளுக்கு உதவும் தமிழ்நாட்டு பிரமுகராக நடித்துள்ளார். அண்மையில் படத்தை பார்த்த ராஜ்கிரண், தானே படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.