ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தி.மு.க., விலிருந்து விலகுவதாக நடிகை குஷ்பூ திடீரென அறிவித்துள்ளார், இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிக்கு விலகல் கடிதமும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டவர், இரு மகள்களுக்கு தாயானதோடு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு தான் அரசியலில் இணையபோவதாக அறிவித்த குஷ்பூ, தன்னை திமுக., கட்சியில் இணைத்து கொண்டார். திமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்த குஷ்பு, 2011 சட்டசபை தேர்தல் மற்றும் 2014 பார்லிமென்ட் தேர்தல்களில் திமுகவுக்காக பிரசாரம் செய்தார்.
நடிப்பு, அரசியல் என்று பிஸியாக இருந்த வந்தார் குஷ்பூ. மேலும் திமுக., சம்பந்தப்பட்ட அனைத்து கட்சி மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக கட்சியில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த குஷ்பூ, திடீரென திமுக., கட்சியை விட்டு முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக., தலைவர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது....
என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு, சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுக-வில் உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியது கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை நன்கு அறிவார்கள்.
ஆனால் என் அர்ப்பணிப்பும் உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ளபோது, நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திமுக.,விலிருந்தும், அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.