சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ரஜினிக்கு பிடித்த லொகேஷன் கர்நாடகாதான். குறிப்பாக மைசூர், மாண்டியாவில் உள்ள பகுதிகள் ரஜினிக்கு மிக பிடித்தமான இடங்கள். அதனாலேயே தன் படங்களின் படப்பிடிப்பை இந்த பகுதியில் வைக்கும்படி இயக்குநர்களிடம் கேட்டுக்கொள்வார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்பை மைசூரில் வைக்கும்படி சொன்னதும் ரஜினிதான். அவரது விருப்பப்படியே லிங்கா படத்தை மைசூரில் தொடங்கினார்கள். அங்கேயே படப்பிடிப்பும் நடைபெற்றது.
சில நாட்களிலேயே அங்கு படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அதன் பிறகு லிங்கா படப்பிடிப்புக்குழுவினர் ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிவடைந்தநிலையில், அடுத்தடுத்த நடைபெற உள்ள ஷெட்யூலும் ஐதராபாத்திலேயே நடைபெற இருக்கிறது.
கர்நாடகாவிலேயே லிங்கா படத்தின் முழுப்படப்பிடிப்பையும் நடத்த நினைத்தனர். ரஜினிக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தியது ரஜினியை அப்செட்டாக்கிவிட்டதாம். தனக்கு எதிராக தன் மாநில மக்களே போராட்டம் நடத்தியதைக் கண்டு மனதளவில் மிகவும் கஷ்டப்பட்ட ரஜினி, அதனாலேயே கர்நாடகாவில் படப்பிடிப்பு வேண்டாம் ஆந்திராவில் வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.