ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். பிரபல வாடியா தொழில் நிறுவனங்களின் தலைவர் நெஸ் வாடியாவுடன் இணைந்து பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். ஆரம்பத்தில் பிசினஸ் பார்ட்னர்களாக இருந்தவர்கள் பின்னர் காதலர்களாக மாறினார்கள். ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள். ஐபிஎல் போட்டிகளின்போது கேலரியில் இருவரும் செய்யும் ரொமான்ஸ்கள் ரொம்பவே பாப்புலர். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இவரும் பிரிந்தார்கள். என்றாலும் பிசினஸ் பார்ட்னர்களாக தொடர்ந்தார்கள். இந்த நிலையில் ப்ரீத்தி ஜிந்தா நெஸ் வாடியா மீது பரபரப்பு பாலியல் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து ப்ரீத்தி ஜிந்தா மும்பை போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு நெஸ் வாடியாவை கடந்த 10 ஆண்டுகளாக தெரியும். அவருடன் எனக்கு உறவு இருந்தது. சில காலத்துக்கு முன்பாக எங்கள் உறவு முடிவுக்கு வந்தது. நாங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கூட்டு உரிமையாளர்கள் என்ற போதிலும், தொழில் சம்மந்தமாக மட்டுமே பேசிக்கொள்வோம். சிறிது காலமாக நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. தொழில் தொடர்பாக பேசிய போது, ஓரிரு முறை எங்களுக்குள் சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் தவறாகப் பேச முயற்சித்தார். மிகவும் இழிவுபடுத்தக்கூடிய மொழியில் திட்டினார். .
பெங்களூரில் ஐ.பி.எல். அணி தேர்வு ஏலத்தின்போது, அவர் பக்கத்தில் நான் அமர வேண்டும் என வற்புறுத்தினார். நான் மறுத்தபோது, முரட்டுத்தனமாகவும், கோபமாகவும் நடந்து கொண்டார். தரக்குறைவாக பேசினார். அவரது நடத்தை எனக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்தது. மே மாதம் 30-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய அரையிறுதி போட்டியின்போது, உன்னை ஒன்றுமில்லாமல் செய்து விடுவேன், உன்னை காணாமல் ஆக்கி விடுவேன். நீ ஒன்றும் கிடையாது. ஒரு நடிகைதானே, நான் சக்தி வாய்ந்த பிரபலம் என கூறி மிரட்டினார். வான்கடே மைதானத்தில் நடந்த சம்பவம், என்னை அடித்துப் போட்டு விட்டது. என் உயிர் மீது அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. . எனக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டது.
இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.
ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த குற்றச்சாட்டுகளை நெஸ் வாடியா மறுத்துள்ளார். " இந்த புகார்கள் குறித்து நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். அவை அனைத்தும் பொய்யானவை. அடிப்படை ஆதாரம் இல்லாதவை. என் மீது புகார் சொல்வதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தாவின் புகாரை ஏற்றுக்கொண்ட மும்பை மரைன் டிரைவ் போலீசார் நெஸ் வாடியா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.