ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தித் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருடைய முன்னாள் காதலர் தொழிலதிபரான நெஸ் வாடியா. இவர்களிருவரும் இணைந்துதான் பஞ்சாப் ஐபிஎல் அணியையும் வாங்கினார்கள். பின்னர் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு 2009ம் ஆண்டே பிரிந்து விட்டனர். இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் தனித்தனியாக வந்து அவர்களது அணியை ஊக்கப்படுத்துவார்கள்.
இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் 30ம் தேதி மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த ஒரு ஐபிஎல் போட்டியில் தனது முன்னாள் காதலரான நெஸ் வாடியா, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் மீது காவல் துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. அவர் மீது நான்கு குற்றப் பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்திதான் தற்போது பாலிவுட் வட்டாரங்களில் பரபரபப்பாக பேசப்பட்டு வருகிறதாம். மிகவும் நெருக்கமான காதலர்களாக இருந்த இவர்கள் ஐபிஎல் மேட்ச்சுகளின் மூலம்தான் அதிகப் புகழைப் பெற்றனர். அதிலும், ப்ரீத்தி ஜிந்தா அவரது அணியில் யாராவது சிறப்பாக ஆடினால் அவர்களை கட்டிப் பிடித்து பாராட்டுவதும் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம். இந்த நிலையில் முன்னாள் காதலர் மீதே ப்ரீத்தி இப்படி புகார் அளித்ததன் பின்னணியில் வேறு ஏதோ ஒரு விஷயம் இருப்பதாகவே பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களாம்.