ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தாத்தாவாக நடித்த மஞ்சப்பை படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார் ராஜ்கிரண். அந்த சந்தோஷத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டதில் இருந்து.... தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை ஒரு தந்தையாகவே பார்த்தார்கள். எங்கு சென்றாலும் அப்பா நல்லா இருக்கீங்களா? எங்க வீட்டுக்கு வாங்கப்பா என்றார்கள்.
மஞ்சப்பை பார்த்துட்டு தாத்தா நல்லா இருக்கீங்களான்னு கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. சின்னஞ்சிறு புள்ளைங்கல்லாம் போன் பண்ணி "தாத்தா சென்னை உங்களுக்கு வேண்டாம் எங்க கிராமத்து வீட்டுக்கு வந்துடுங்க"ன்னு போன் பண்றப்போ கண்ணீர் முட்டிக்கிட்டு வருது. எவ்வளவு அன்பு நிறைஞ்ச உலகம்னு நினைக்கிறப்போ நெகிழ்ச்சியா இருக்கு. நான் இனி தமிழ் நாட்டின் குழந்தைகளுக்கு தாத்தா.
எனக்கு சுத்தமா நடிக்கத் தெரியாது. அன்பு கோபம், ஏக்கம் எல்லோர் மனசுலேயும் இருக்கிறது. அதை டைரக்டர் சொல்றப்போ வெளிப்படுத்தினா அதுதான் நடிப்புன்னு சொல்றாங்க. நான் எந்த கேரக்டரையும் செலக்ட் பண்றதில்லை. என்னை இப்படி பயன்படுத்திக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டு டைரக்டர்ஸ் வர்றாங்க. அவுங்க சொல்றத நான் செஞ்சி கொடுக்கிறேன்.
சினிமா பெரிய மீடியா இதன் மூலமா மக்களுக்கு நல்லதும் சொல்லலாம். கெட்டதும் சொல்லலாம் எனக்கு சோறு போட்டது சினிமா. அதை வச்சிக்கிட்டு மக்களுக்கு எப்படி கெட்டது சொல்ல முடியும். அதனாலதான் வில்லன் கேரக்டர் பண்றதுல்ல. அட ஏன் தம்பி சினிமாலகூட வில்லனா இருக்க பிடிக்கல தம்பி. வாழுற வரைக்கும் நல்ல மனுஷான வாழ்ந்துட்டு போவோமே சினிமாவுலேயும் சரி, நிஜத்துலேயும் சரி. என்கிறார் நெகிழ்ச்சியாக.