ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்.பார்த்திபன் என்கிற ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தற்போது இயக்கிவரும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் கதையே இல்லை என்பதையே படத்தின் விளம்பரங்களில் முக்கிய வாசகமாக வைத்திருக்கிறார் ஆர்.பார்த்திபன். அதுமட்டுமல்ல, இந்தப் படத்தின் கதையைச் சொல்பவர்களுக்கு கடன் வாங்கியாவது ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன்!! என்றும் காமெடியாக சொல்லி வருகிறார். சரி..கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கதை இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது.
இதுதான் கதை... படத்தின் கதாநாயகன் ஒரு உதவி இயக்குநர். ஒரு கதையை தயாரித்து செய்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்குகிறார். அவரை இயக்குநராக வைத்து படம் எடுக்க யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் அவரை வைத்து படம் எடுக்க முன் வருகிறார். அவரிடம் கதை சொல்கிறார். அவர் சொல்லும் படத்தின் கதை காட்சிகளாக விரிகின்றன. இதுதான் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் கதை.