மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பொதுவாக ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும். அதனால் அவர்களுக்காக ஸ்கிரிப்ட் பண்ணி வைத்திருப்பவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கதையை சொல்லிவிட்டு வருவார்கள். அதையடுத்து, சில மாதங்களாக அவர்களிடமிருந்து பதில் வரும் என்று காத்திருப்பார்கள். அதற்கான அறிகுறியே தென்படாதபோது வேறு நடிகர்களை வைத்து படம் பண்ணத் தொடங்கி விடுவார்கள்.
அப்படித்தான், ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்து கதை சொன்ன சில இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர். ஆனால், ரஜினி போன்ற நடிகர்களைப்பொறுத்தவரை, கதை பிடித்து விட்டால் பின்னர் அவர்களுக்கு எப்போது தோனுகிறதோ அப்போதுதான் சம்பந்தப்பட்ட டைரக்டர்களை அழைப்பார்கள். ஒருவேளை சொன்ன கதை பிடிக்கவில்லை என்றால் அதை ஓப்பனாக சொல்ல மாட்டார்கள். அதை வைத்தே கதை சொல்லிவிட்டு காத்திருக்கும் இயக்குனர்கள் தங்கள் கதை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் காலாகாலமாக நடந்து கொண்டு வருகிறது.
அந்த வகையில், கே.வி.ஆனந்த் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால்தான் அதன்பிறகு அவரை அவர் அழைக்கவே இல்லை. அதனால் அவரும் அதை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். இருப்பினும், அவர் ஒவ்வொரு புதுப்படத்தை ஆரம்பிக்கும்போதும், ரஜினியை அவர் இயக்குவதாக செய்திகள் வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் அது சம்பந்தமாக செய்திகள் வெளியாவதைக்கண்டாலே, நான் ரஜினி சாரை சந்திக்கவும் இல்லை, கதையும் சொல்லவில்லை. என்னை விட்டுடுங்கப்பா என்று டென்சனில் பேசுகிறார் கே.வி.ஆனந்த்.