Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவி தலையிட்டதால் 5 கோடி நஷ்டம்…!

12 ஜூன், 2014 - 14:48 IST
எழுத்தின் அளவு:

நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் நடிகர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'எவடு' திரைப்படமும் வெற்றிப் படமாகவே அமைந்தது. இந்த சூழ்நிலையில் ராம் சரண் தற்போது நடித்து வரும் படத்தில் அப்பா சிரஞ்சீவியின் தலையீட்டால் 5 கோடி ரூபாய் இழக்க நேரிட்டுள்ளதாம்.


தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் கிருஷ்ணவம்சி. இவரது இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடித்து வரும் படம் 'கோவிந்துடு அந்தாரி வாடிலே'. இந்த படம் ஆரம்பிக்கப்பட்டது முதலே படத்தின் நாயகன் ராம் சரணுக்கும், இயக்குனர் கிருஷ்ணவம்சிக்கும் ஒத்துப் போகவில்லை, அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இயக்குனரின் வேலையில் ராம் சரணும், சிரஞ்சீவியும் அளவுக்கதிகமாகவே தலையிட்டுள்ளனர். பல காட்சிகளை இப்படி எடுக்க வேண்டும், அப்படி எடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். இதனால், படப்பிடிப்பு கூட தடைபட்டுள்ளது.


சமீபத்தில், எடுத்தவரை போட்டுப் பார்த்த பல காட்சிகளில் சிரஞ்சீவிக்கு திருப்தியில்லாமல் போகவே, அவற்றை மீண்டும் எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். இதனால், சிரஞ்சீவிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் பின் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு, அந்தக் காட்சிகளை சிரஞ்சீவியும், ராம் சரணும்தான் மீண்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கோரியதால் அதற்கான செலவை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவானதாம். அதனால், ராம் சரண் அவருடைய சம்பளத்தில் இருந்து 5 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். இனி இந்த படத்தின் படப்பிடிப்பு எப்படி நடைபெறும் என்று தெலுங்குத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறதாம்.


சமீபகாலமாக அரசியலில் கெட்ட பெயரைச் சம்பாதித்த சிரஞ்சீவி, பொது மேடைகளில் கூட மக்களைக் கவர முடியாமல் தவித்துள்ளார். தற்போது திரை உலகிலும் அவரது பெயரைக் கெடுத்துக் கொள்கிறாரே என அவருக்கு நெருக்கமானவர்கள் கவலைப்படுகிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in